ராஜினாமா செய்வேன் எம்.எல்.ஏ.,சவால்

'கள்ளக்குறிச்சி தொகுதியில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்றால், நான் வகிக்கும் மாவட்ட செயலர் மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்வேன். இதே போன்ற சவாலுக்கு அ.தி.மு.க.,வினர் தயாரா?' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. இதில் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலருமான வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசுகையில், '10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

எங்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளை கூறும் அ.தி.மு.க., மாவட்ட செயலர் குமரகுருவுக்கு நான் சவால் விடுகிறேன். வரும் தேர்தலில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.,வை தோற்கடிப்போம். நாங்கள் வெற்றி பெறவில்லை என்றால் என்னுடைய மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் (குமரகுரு) தயாரா?' என ஆவேசமாக பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்