மோடி சுட்ட வடை: வித்தியாச பிரசாரம்

தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர், வித்தியாசமான முறையில் பா.ஜ.,வை விமர்சித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க., தொண்டர்கள், பிரதமர் மோடியின் முகம் அச்சிடப்பட்ட முகமூடி அணிந்து வருகின்றனர். அவர்கள் 'மோடி சுட்ட வடை' என்ற துண்டு பிரசுரம் தயாரித்துள்ளனர்.

அதில், மோடி தனது கையில் வடை ஒன்றை வைத்துக் காட்டுவது போல் படத்தை அச்சிட்டுள்ளனர். அந்த துண்டுப் பிரசுரத்தோடு தயாராக எடுத்து வரும் உளுந்த வடையையும் மக்களுக்குக் கொடுக்கின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகள் என்ற பெயரில் பிரதமர் மோடி இதுவரை தமிழகத்திற்கு அறிவித்த நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், அவர் வாயால் வடை சுடுகிறார் என்றும், அவரை நம்ப வேண்டாம் என்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில இடங்களில், மோடி தண்ணீரில் வடை சுடுகிறார் என அச்சிடப்பட்ட பிரசுரங்களை வினியோகித்து, தீவிர பிரசாரத்தில் தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்