'நான் சைவத்துக்கு மாறிட்டேன்!' பன்னீர் செல்வம்

நான் கடந்த 15 ஆண்டுகளாக, அசைவம் சாப்பிடுவதில்லை,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' ஏற்படுத்தி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.அதில், அவர் பேசியதாவது:ஒவ்வொரு முறை கூட்டம் ஏற்பாடு செய்யும் போதும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெ.சி.டி.பிரபாகர், என்னிடம் வந்து, 'அண்ணே இதுதான் உணவு பட்டியல்' எனக்கூறி காண்பிப்பார். அதில், ஸ்வீட், பொரியல் வகைகள் இடம் பெற்றிருக்கும். நானும் பார்த்து விட்டு, சரி ஏற்பாடு செய்யுங்கள் என்பேன்.ஆனால், நேற்று முன்தினம் இரவு வரை, அவர் என்னிடம் சாப்பாடு குறித்த விபரத்தை தெரிவிக்கவில்லை. கூட்டத்திற்கு வந்த பின், அவரை அழைத்து, 'என்ன சாப்பாடு பட்டியலை காட்டவில்லை; என்ன விபரம்?' என்று கேட்டேன்.அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, 'இன்று பிரியாணி ஏற்பாடு செய்துள்ளேன்' என்றார். நான் அசைவம் சாப்பிட்டு, 15 ஆண்டுகளாகி விட்டது; சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறேன். உங்களுக்கு, மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்