லோக்சபா தேர்தல்: தமிழகம் வரும் 200 கம்பெனி துணை ராணுவம்

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 200 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேவைப்படுவதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறினார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சத்யபிரதா சாஹு, தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தார். சட்டசபை தொகுதிகள் காலி விபரம் குறித்து, சட்டசபை செயலகத்திடம் இருந்து தகவல் வரவில்லை; வந்தால், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்போம்.

இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை, தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். பொன்முடி வழக்கின் தீர்ப்பு விபரத்தை, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். சட்டசபை செயலகம் முறைப்படி தெரிவித்த பின், அந்த தகவல் தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தப்படும்.

லோக்சபா தேர்தலுக்கு, 200 கம்பெனி துணை ராணுவம் தேவை என, தேர்தல் கமிஷனில் தெரிவித்துள்ளோம். கடந்த, 2019 தேர்தலின் போது, 160 கம்பெனி துணை ராணுவம் வந்தது. துணை ராணுவ வீரர்கள், இரண்டு கட்டமாக வருவர்.

கடந்த தேர்தலில், சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்ததா என்ற விபரங்களை, தலைமை தேர்தல் ஆணையர், போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார்கள் வந்தால், அதன் விபரத்தை, தேர்தல் கமிஷனின் இ.எஸ்.எம்.எஸ்., என்ற மொபைல்போன் செயலியில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஏதேனும் பொருட்கள் பறிமுதல் செய்தாலும், அந்த மொபைல் போன் செயலியில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அனைத்து துறை அலுவலர்களும் அறிந்து கொள்ள முடியும். தமிழகத்தில், 66 சதவீத ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா'க்கள் பொருத்தி, ஓட்டுப்பதிவு நேரடியாக இணையதளங்களில் ஒளிபரப்பப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 'மைக்ரோ' பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்.

இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.

மார்ச் 1ல் வருகை




லோக்சபா தேர்தல் பணிக்காக, மார்ச் 1ம் தேதி, 15 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர், தமிழகம் வர உள்ளனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 160 கம்பெனி துணை ராணுவத்தினர், பாதுகாப்பு பணிக்கு வந்தனர். இந்த தேர்தலுக்கு, 200 கம்பெனி துணை ராணுவம் தேவை என, தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் கோரப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் முதற்கட்டமாக, 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை நியமித்துள்ளது. அவற்றில், 15 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர், மார்ச் 1லும்; 10 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர், மார்ச் 7லும் தமிழகம் வர உள்ளனர் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். பொதுவாக வேட்பு மனு தாக்கல் துவங்கும்போது, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிக்கு வருவர். இம்முறை முன்னதாகவே வர உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்