அ.தி.மு.க., பணிமனை திறப்பு கோஷ்டி தகராறு: கார் உடைப்பு

திருவள்ளூர் - தனி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, ஆவடி அடுத்த திருநின்றவூரில், நேற்று முன்தினம் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணிமனை திறந்தனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலர் அலெக்சாண்டர் ஆதரவாளரான, மாநில இளைஞர் பாசறை துணை தலைவர் கிஷோர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னை மத்திய தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமிடம் தெரிவிக்கவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த அப்துல் ரஹீம் ஆதரவாளர்கள், அ.தி.மு.க., திருநின்றவூர் முன்னாள் நகர செயலர் தர்மலிங்கம் சார்பில் கேள்வி எழுப்பினர்.

அப்போது, இரு தரப்பினர் இடையே பல நாட்களாக நிலவிய உட்கட்சி பூசல், நேற்று முன்தினம் மோதலாக வெடித்தது. இதில், தர்மலிங்கம் தரப்பினர், கிஷோர் மற்றும் அவரது ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுக்கச் சென்ற தியாகராஜன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அத்துடன், கிஷோர் ஆதரவாளர் ஒருவரின், 'மஹிந்திரா ஸ்கார்பியோ' கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த கைகலப்பில், தர்மலிங்கம் தரப்பில் தினேஷ் மற்றும் கிஷோர் தரப்பில் தியாகராஜன் ஆகிய இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பு புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்