வங்கி கணக்குகளை முடக்குவதாக அச்சுறுத்தினர்: பிரேமலதா

திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, பொன்னேரிசட்டசபை தொகுதியில், அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தேர்தல் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

அ.தி.மு.க., உடன் கூட்டணி கையெழுத்து போடும் வரை பா.ஜ., விடம் இருந்து எவ்வளவோ நிர்பந்தம் வந்தது. எல்லாவற்றையும் துாக்கி எறிந்து, தைரியமாக 'அம்மா' மாதிரி நானும் முடிவெடுத்தேன். இந்த முறை கூட்டணி அ.தி.மு.க., உடன் தான் என, உறுதியாக, மக்களுக்காக முடிவெடுத்தேன்.

எத்தனையோ நிர்ப்பந்தங்கள், உங்களிடம் சொல்வதற்கென்ன, வங்கி கணக்குகளை முடக்குவதாக அச்சுறுத்தினர். இந்த பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு அஞ்சாது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அவற்றை கண்டு அஞ்சுவதில்லை. அதனால் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கும், இங்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,விற்கும் இந்த தேர்தலில் சவுக்கடி கொடுத்து, அவர்களை வீட்டிற்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்