கந்துவட்டிக்காரர் போல கணக்கு கேட்கலாமா: நிர்மலாவை சாடிய ஸ்டாலின்

"மோடி சொல்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஆர்.டி.ஐ., மூலம் புரளி கிளப்பிவிட்டுள்ளனர். உ.பி.,யில் கச்சத்தீவு பற்றிப் பேசியதிலேயே மோடி குழப்பத்தில் இருப்பது தெரிந்துவிட்டது" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் ஆரணி வேட்பாளர் தரணி வேந்தன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவில் சமூக நீதியும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பா.ஜ., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா,ஜ., நாட்டை ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும் என மக்கள் தயாராகிவிட்டனர்.

இதனை நன்கு உணர்ந்திருப்பது மோடி தான். அதனால் தான் பயத்தில் அவரது கூட்டணியாக இருக்கிற ஐ.டி..,யை ஏவி காங்கிரசின் கணக்குகளை முடக்குவது, அமலாக்கத்துறையை ஏவி ஆம் ஆத்மி கட்சியை அழிப்பது என செயல்படுகிறார்.

இப்போது நாட்டு மக்களை குழப்ப ஆர்.டி.ஐ.யையும் தன் கூட்டணியில் மோடி சேர்த்துள்ளார். மோடி சொல்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனத் தெரிந்துவிட்டதால் ஆர்.டி.ஐ., மூலம் புரளி கிளப்பிவிட்டுள்ளனர்.

மோடி குழப்பத்தில் இருப்பதை உ.பி., யில் வைத்து கச்சத்தீவு பற்றிப் பேசுவதில் இருந்தே தெரிந்துவிட்டது. மோடியின் இந்தக் குழப்பங்கள் ஜூன் 4ம் தேதி தெளிந்துவிடும்,

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை, காமெடி டைமாக மாற்றிவிட்டார். அதிலும் ஈ.டி., க்கும் எனக்கும் சம்மந்தமில்லை என அவர் கூறியதைக் கேட்டு அனைவரும் ஆடிப் போய்விட்டனர்.

ஜார்க்கண்ட் முதல்வர், டில்லி முதல்வர் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் ஆகியவை குறித்தெல்லாம் மோடிக்கு தெரியாது என்று சொல்வதை நாங்கள் நம்பிட்டோம்.

நாளை உங்களுக்கும் குஜராத்துக்கும் சம்மந்தமில்லை என சொன்னால் கூட மக்கள் நம்பிவிடுவார்கள் என நினைக்க வேண்டாம். தமிழகம் இரண்டு இயற்கை பேரிடர்களை சந்தித்தபோது, கேட்ட நிதியை தரவில்லை. நிதி அமைச்சர் வந்து பார்த்துவிட்டு சென்ற பிறகும் நிதி வரவில்லை.

மக்களுக்கு உதவுவதை பிச்சை என நிர்மலா சீதாராமன் கொச்சைப்படுத்தினார். நேற்று அவர் பேட்டியில் 5000 கோடி தந்துவிட்டோம் என்கிறார். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கந்துவட்டிக்காரர் போல நிதி அமைச்சர் பேசுகிறார்.

அது உலக வங்கியிடம் இருந்து வாங்கிய பணம். அது எப்படி மத்திய அரசின் கணக்கில் வரும். எதற்கும் நிதி தராமல் மோடி போல நிதியமைச்சரும் வாயில் வடை சுடுகிறார்.

நாங்கள் தேசிய பேரிடர் நிதியில் இருந்து 37000 கோடி ரூபாயை கேட்டோம். செலவு செய்யாமல் இருக்கும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் கேட்கிறோம். ஆனால், வாழைப்பழ காமொடி போல அது தான் இது என நக்கலாக பேசுகிறார்.

கடந்த தேர்ததலில் கூறிய அனைத்து வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். காலை உணவுத்திட்டம், மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தோழியர் விடுதி. நான் முதல்வன் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்த திட்டங்களால் தமிழகத்தில் உள்ள குடும்பங்கள் பலன் அடைகின்றன. திராவிடம் என்ற சொல் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்கள் எங்களை மத விரோதி என சித்தரிக்க முயற்சி செய்கின்றனர்.

மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைப்பவர்களுக்குத் தான் நாங்கள் எதிரி. வேறு எந்த மதத்துக்கும் எதிரி கிடையாது. கோவில்களுக்கு குடமுழுக்கு, கோவில் குளங்கள் சீரமைப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.

மக்களைப் பண்படுத்த ஆன்மிகத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர பா.ஜ., போல பிளவுபடுத்த பயன்படுத்தக் கூடாது. திராவிட மாடல் என்பது இந்தியாவின் மாடலாக மாறி உள்ளது.

அ.தி.மு.க.,வுக்கு எதிரி யார்.. எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்பது தெரியாமல் ரகசிய கூட்டணிக்கு ஆதாயம் தேடித் தருவதற்காக பழனிசாமி களத்துக்கு வந்துள்ளார்.

தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரின் முதுகையும் குத்தியவர் பழனிசாமி. துரோகங்கள் நிறைந்தது தான் பழனிசாமியின் கதை.

இவ்வாறு அவர் பேசினார்.


Barakat Ali - Medan, இந்தோனேசியா
05-ஏப்-2024 11:43 Report Abuse
Barakat Ali கணக்கு கேட்காதீர்கள் .... நாங்கள் நேர்மையானவர்கள் .....
Barakat Ali - Medan, இந்தோனேசியா
04-ஏப்-2024 13:25 Report Abuse
Barakat Ali புதிது புதிதாக கடன் வாங்கிக்கொண்டே போவது இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் ..... கடனை எப்படி அடைப்பீர்கள் ???? கட்சி நிதியிலிருந்தா ???? முறைகேடாக திமுக பிரமுகர்கள் சொத்து சேர்த்துவிட்டதாக அண்ணாமலை சொல்கிறாரே .....
Sridhar - Jakarta, இந்தோனேசியா
04-ஏப்-2024 12:54 Report Abuse
Sridhar கணக்கு கேட்டாலே இந்த திருட்டு கும்பலுக்கு உதறல் எடுத்துடும். கொடுத்த பணத்துக்கு கணக்கு கொடுக்காம மேற்கொண்டு எப்படியா பணம் கொடுப்பாங்க? அதுசரி, தீபாவளியும் விநாயகர் சதுர்த்தியும் பிஜேபி பண்டிகைகளா? அது ஹிந்து மக்கள்உடையதுதானே? அதுக்கு ஏன் நீ வாழ்த்து சொல்லல? இப்போ ஹிந்துக்களுக்கு விரோதி இல்லேன்னு பம்முனா நாங்க நம்பிருவோமா? தமிழகம் பூரா இந்த திருட்டு திராவிடியா கும்பலுக்கு கிளம்பும் எதிர்ப்பு அலையை பார்க்கும்போது ரொம்பநாளைக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா இருக்கு
Balamurugan - coimbatore, இந்தியா
04-ஏப்-2024 11:54 Report Abuse
Balamurugan கணக்கு கேட்டா கோபம் வருதோ ?
GoK - kovai, இந்தியா
04-ஏப்-2024 11:39 Report Abuse
GoK கணக்குக்கும் இவனுங்களுக்கும் காதப்பொருத்தம்...கணக்கு கேட்டதால் mgr வெளியிலே போனார் அதிமுக வந்தது முதல் சாவு மணி இவன் குடும்பத்துக்கு இப்போது வரப்போவது கல்லரைப்போட்டியில் கடைசி ஆணி
sugumar s - CHENNAI, இந்தியா
04-ஏப்-2024 11:32 Report Abuse
sugumar s எங்களுக்கு கணக்கு தெரியாது . தெரியாததெல்லாம் ஏம்ப்பா கேக்கறீங்க
Karthik - Dindigul, இந்தியா
04-ஏப்-2024 11:03 Report Abuse
Karthik மக்களின் வரிப்பணத்துக்கு கணக்கு வைத்திருக்க முடியலைன்னா, ராஜினாமா செய்துவிடுங்கள்.
PR Makudeswaran - Madras, இந்தியா
04-ஏப்-2024 10:50 Report Abuse
PR Makudeswaran கணக்கு கேட்டாலே தி மு க வுக்கு ஆகாது. ஆனாலும் பணம் கொடுத்தவர்கள் கேட்பது தப்பு இல்லை.
S.Bala - tamilnadu, இந்தியா
04-ஏப்-2024 10:07 Report Abuse
S.Bala காசு வாங்குன கணக்கு கேக்கத்தான் செய்வாங்க. அரசு என்ன கந்து வட்டி வாங்குதா ? கணக்கு இல்லாம குடுக்க இது என்ன மாமியார் வீடா
Ram - ottawa, கனடா
04-ஏப்-2024 09:45 Report Abuse
Ram முதல்ல குடுத்த காசுக்கு கணக்கு காட்டுங்கள்
மேலும் 18 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்