போரில் வெற்றி பெறும் வரை ஓயப்போவதில்லை: ராகுல் சபதம்

"பாரத மாதாவின் குரலை நசுக்க முயலும் வெறுப்பு, ஊழல், அநீதி போன்ற சக்திகளிடம் இருந்து நமது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் தான் இந்த தேர்தல்" என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2019 தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்தமுறையும் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணியில் உள்ள இ.கம்யூ., சார்பில் ஆனி ராஜா போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பேரணியாக ராகுல்காந்தி சென்றார். அவருடன் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடன் சென்றனர். முடிவில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின், ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வயநாடு எனது வீடு, வயநாட்டு மக்கள் எனது குடும்பம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இம்மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களிடம் இருந்து அளவுகடந்த அன்பையும் பாசத்தையும் பெற்றேன்.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக மீண்டும் இந்த அழகிய மண்ணில் இருந்து வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மிகுந்த பெருமைப்படுகிறேன்.

இந்தத் தேர்தல் என்பது இந்தியாவின் ஆன்மாவை காப்பதற்கான போராட்டம். பாரத மாதாவின் குரல்வளையை நசுக்க முயலும் வெறுப்பு, ஊழல், அநீதி போன்ற சக்திகளிடம் இருந்து நமது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம்.

இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொருவருடனும் இணைந்து இந்தப் போரில் வெற்றி பெறும் வரை நான் ஓயப்போவதில்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் மத்திய ஆட்சியை வலுப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Raa - Chennai, இந்தியா
04-ஏப்-2024 19:04 Report Abuse
Raa பயம் நல்லா தெரியுது கண்ணில், வார்த்தையில், நினைப்பில். அது சரி, நீங்கள் சொல்லும் போரில், நீங்க என்ன ரோல் பண்ணுகிறீர்கள்? வேடிக்கையா?
sugumar s - CHENNAI, இந்தியா
04-ஏப்-2024 11:35 Report Abuse
sugumar s in india it is not possible to win. may be he can make an attempt in italy
வாய்மையே வெல்லும் - மனாமா, பஹ்ரைன்
04-ஏப்-2024 07:58 Report Abuse
வாய்மையே வெல்லும் வயநாடு எனது வீடு.. வயநாட்டு மக்கள் எனது உலகம்.... வயநாட்டை விட்டாங்க உங்களுக்கு நாதியேது மிஸ்டர் ராவுளு.. உங்களுக்கு உத்வேகம் கொடுப்பதே குறிப்பிட்ட பிற்படுத்த மக்கள்.. பாரதமாதா நசுக்கல் கதை எல்லாம் புளித்த மோரில் கலந்த நாற்றம் பிடித்த பழைய ஆராதபழசு கதை.. ரீல் அறுந்து பல மாதம் ஆச்சு.. வேறு எதுனா புதுசா கயிறு திரிக்கவும் .. எவனாவது முட்டாள் இருந்தா அதை நம்புவான் என்று எதிர்பார்க்கலாம்.. கூடிய விரைவில் உங்க கட்சிக்கு மூடு விழா நீங்களே கோலாகலமாக கொண்டாடுவார்கள்.. இது நடக்கத்தான் போகிறது..
VENKATASUBRAMANIAN - bangalore, இந்தியா
04-ஏப்-2024 07:30 Report Abuse
VENKATASUBRAMANIAN பாவம் இவர்.
தாமரை மலர்கிறது - தஞ்சை, இந்தியா
03-ஏப்-2024 23:02 Report Abuse
தாமரை மலர்கிறது போரில் ஈடுபட ஆசையாக இருந்தால், உக்ரைன் அல்லது காசா செல்லுங்கள். அதைவிட்டு இந்தியாவில் என்ன வேலை? பப்புக்கு நூறு வயதானாலும், பிரதமர் ஆகமுடியாது.
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
03-ஏப்-2024 22:54 Report Abuse
R.MURALIKRISHNAN . அது சரி அதுக்கு ஊழல் பெருச்சாளிகள் நீங்களெல்லாம் இணைந்து நாட்டை கொள்ளையடிக்க போறீர்களா
Rajah - Colombo, இலங்கை
03-ஏப்-2024 18:42 Report Abuse
Rajah போர் என்றால் உங்களுக்கு பிடிக்குமா? பல லட்சம் மக்களைக் கொன்ற அனுபவம் வேறு உள்ளது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்