பரிசு கண்டு பதறிய செல்லுார் ராஜு

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேச எழுந்தார். அவர் என்றாலே தற்போது சாபம் கொடுப்பவர் என்ற பெயர் கட்சிக்காரர்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது.

அன்று அவரது பிறந்த நாள்.அதைத் தெரிந்து கொண்ட தொண்டர்கள், நிர்வாகிகளில் சிலர் அவருக்கு பிறந்தநாள் பரிசு எனக்கூறி பொன்னாடை போர்த்தினர்; சிலர் கையிலும் கொடுத்தனர்.

அதை என்னவோவென்று வாங்க கைநீட்டியவர், திடீரென நினைவுக்கு வந்தவராக, 'ஐயையோ... தேர்தல் கமிஷன் இதனையும் கணக்கில் எழுதிடுவாங்க... கொண்டு போங்க... கொண்டு போங்க...'' என தீயைத் தொட்டவர் போல பதறினார். இதனை பார்த்த தொண்டர்கள் சிரித்து ரசித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்