ஓ.பி.எஸ்.,சுக்கு செல்லுார் ராஜு விட்ட சாபம்

சில நாட்களுக்கு முன்பு, கட்சி நிர்வாகிள் கூட்டத்தில் தான் பேசுவதை கேட்காமல் எழுந்து செல்ல முயன்றோரை, 'எந்திரிச்சி போனீங்கன்னா ரத்தம் கக்கி சாவீங்க' என சாபம் விட்டார் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு. இந்நிலையில், மதுரையில் அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பேசியதாவது:

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோரை, 'செருப்புக்கு சமம்' என அண்ணாமலை பேசியது கண்டிக்கத்தக்கது. ஹிந்தி படித்தோர் அதிகம் பேர், ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர். அண்ணாமலைக்கு தெரிய வேணாமா. ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசியவர் அண்ணாமலை. தினகரனுக்கு மானம், ரோஷம் இருந்தால் அவர் பின்னாடி போயிருக்கக் கூடாது.

பன்னீர்செல்வம் நினைத்தது போலவே பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தார். தற்போது இருக்கிற இடம் தெரியாமல் போயுள்ளார். அ.தி.மு.க.,வுக்கு எதிராக வேலை பார்ப்போர் தேர்தலுக்கு பின் காணாமல் போவர்.

இவ்வாறு அவர் சாபம் விட்டார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்