'திருப்பூர் எம்.பி., செய்த பணி என்ன?: பட்டியலிட்டால் ஒரு கோடி ரூபாய் பரிசு!'

'திருப்பூர் எம்.பி., தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால், 1 கோடி பரிசு' என்ற போஸ்டர் திருப்பூரை பரபரப்பாக்கி இருக்கிறது.

இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த சுப்பராயன், 2019 முதல் திருப்பூர் எம்.பி.,யாக இருக்கிறார். தற்போதைய லோக்சபா தேர்தலில், மீண்டும் தி.மு.க., கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ளார். கட்சி விதிமுறைகளை மீறி தேர்தலில் போட்டியிடுவதாக, கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டபோதும், முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மீண்டும் 'சீட்' வாங்கி விட்டார்.

'தொகுதிக்குள் தலைகாட்டவில்லை' என, இவர் மீது அதிருப்தி இருக்கும் நிலையில், 'லோக்சபா தொகுதி மக்களுக்கு, 1 கோடி பரிசு' என்ற போஸ்டர் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.

'மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு' என்ற பெயரில் வெளியாகியுள்ள போஸ்டர் அறிவிப்பில், 'திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ஐந்தாண்டு காலம் தொகுதிக்கு என்ன செய்தார் என்பதை மக்களுக்கு பயனுள்ளதாக பட்டியலிட்டு கூறினால், 1 கோடி பரிசு' என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எம்.பி., சுப்பராயனிடம் தொடர்பு கொண்டு கருத்து கேட்க முயன்றோம். போனை அவருடைய உதவியாளர் எடுத்து பேசினார்.

'நாங்க மனு தாக்கல் வேலையில் பிசியா இருக்கோம். இந்த மாதிரியான அறிவிப்புகள், தேர்தல் நேர பரபரப்புக்காக வெளியிடப்படுவது இயற்கைதான். எதிர்தரப்பினர் செய்யும் காரியங்களில் இதுவும் ஒன்று' என்று மட்டும் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்