பிச்சை பணம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையின் 'கடமை உணர்ச்சி'

திருப்பூர், காங்கேயம் ரோடு, நல்லுார் பகுதியில் ஒரு பெண் மது போதையில் சுற்றித் திரிந்தார். அவர் பணம் நிறைய வைத்திருந்ததால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள், நல்லுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் அவரை சோதனையிட்ட போது, 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளித்தனர்.

பறக்கும் படையினர் அப்பணத்தை பறிமுதல் செய்தனர். பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில், அப்பெண் திருச்சி துறையூரைச் சேர்ந்த மணிமேகலை, 36, என்பது தெரிந்தது. கடந்த வாரம் பண்ணாரி கோவில் குண்டம் திருவிழாவில் ஐந்து நாட்கள் பக்தர்களிடம் யாசகம் பெற்ற பணம் என்பதும் தெரிந்தது. தொடர்ந்து, அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர், ''பிச்சை எடுக்கும் பணம், விவசாயிகள், வியாபாரிகளின் பணத்தை பறிமுதல் செய்யும் பறக்கும் படையினர், அரசியல் கட்சியினரை கண்டு கொள்வதில்லை, சோதனை செய்வதில்லை. இதற்கு பெயர் சோதனையா?'' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்