சென்னை:'விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள, பானை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்' என, அம்பத்துார் தொகுதி சுயேச்சை வேட்பாளர் நர்மதா, தலைமை தேர்தல் கமிஷனருக்கு மனு அனுப்பி உள்ளார்.
மனுவில், அவர் கூறியிருப்பதாவது:நான் சமூக ஆர்வலர். கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, ஏப்., 18 அன்று, விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும், பா.ம.க.,வினருக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது.விடுதலை சிறுத்தை கட்சிக்கு, பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் ஓட்டுப்பதிவு அன்று பானையை உடைத்ததால், இந்த மோதல் ஏற்பட்டது. இது, இரு சமுதாயத்தினருக்கு இடையிலான மோதலாக மாறியது.அதேபோல, இம்மாதம், 7ம் தேதி, அரக்கோணத்தை அடுத்த சோகனுாரில், இருவர் கொலை செய்யப்பட்டனர். இதிலும், பானை சின்னம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள, பானை சின்னத்தை, நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும், புது சின்னத்தை வழங்கினால், இதுபோன்ற மோதல்களை தவிர்க்கலாம்.இவ்வாறு, நர்மதா கூறியுள்ளார்.
வாசகர் கருத்து