மருமகனை கழற்றிவிட்ட தாய்மாமன் கமல்

சிவகங்கை லோக்சபா தொகுதி பிரசாரத்திற்கு வராமல், மருமகனை தாய்மாமனான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கழட்டி விட்டதாக தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளரான கார்த்தி ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இத்தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் சிட்டிங் எம்.பி., கார்த்தி, அ.தி.மு.க., சார்பில் கல்லல் ஒன்றிய செயலர் சேவியர் தாஸ், பா.ஜ., கூட்டணி சார்பில் இ.ம.க.மு.க., தேவநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு மானாமதுரையில் பேட்டியளித்த கார்த்தி,''தாய்மாமன் முறை கொண்ட கமல் என்னை ஆதரித்து சிவகங்கை தொகுதிக்கு பிரசாரத்திற்கு கண்டிப்பாக வருவார்,'' என்றார். இந்நிலையில், கமல் ஆதரித்து பிரசாரம் செய்யும் இடங்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில், மார்ச் 29 முதல் ஏப்., 16 வரை ஈரோடு, சேலம், திருச்சி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை, மதுரை, துாத்துக்குடி, திருப்பூர், கோயம்புத்துார், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்., போட்டியிடும் தொகுதிகள் இல்லை. குறிப்பாக சிவகங்கை விடுபட்டுள்ளதால் கார்த்தி ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


Indian - Jayankondam,இந்தியா
25-மார்-2024 14:00 Report Abuse
Indian காங்கிரஸ் தொகுதி விட்டுக்கொடுக்காததால அவர்கள் தொகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு போகல போல.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்