செத்தாலும் தனிச் சின்னம் தான்... புண்படுத்த வேண்டாம் : கண்கலங்கிய துரை வைகோ

"நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள். அவர்களுக்காக வேலை பார்க்கிறோம். திராவிடர் கழகம் போல எங்கள் கட்சியை நடத்திவிட்டு போகிறோம்" என, ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ பேசினார்.

தி.மு.க., கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் துரை வைகோ பேசியதாவது:

தி.மு.க.,வுக்கு சிவனும் சக்தியாக இருக்கும் நேருவை சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். அவரிடம் தனியாக பேசும்போதுகூட, 'உங்கள் மகன் போல நினைத்துக் கொள்ளுங்கள்' என்றேன். நான் அரசியலுக்கு வருவேன் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அரசியலுக்கு வந்தேன். என் அப்பாவுக்கு தலைகுனிவு வந்துவிடக் கூடாது என்பதற்காக போட்டியிடுகிறேன். இப்போதும் நான் பெரிய வேட்கையுடன் அரசியல் ஆசையுடன் இருக்கிறேனா என்றால் கிடையவே கிடையாது. உண்மையாகவே சொல்கிறேன்.

இப்போதும், தேர்தலில் நிற்கிறேன் என்று சொல்லவில்லை. வேறு யாரை நிறுத்தினாலும் தேர்தல் வேலை பார்க்கிறேன் என்று தான் சொன்னேன். ஏனென்றால், என் கட்சிக்காகவும் அப்பாவுக்காகவும் 30 வருடங்கள் உழைத்து எங்கள் கட்சிக்காரர்கள் தேய்ந்துவிட்டார்கள். (அழுகிறார்)

என்னுடைய விருப்பம் என்று எதுவும் இல்லாமல் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். அண்ணாவின் கட்சி தி.மு.க, கருணாநிதியின் கட்சி தி.மு.க, என் அப்பாவும் தி.மு.க.,வில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். உதயசூரியன் சின்னத்தை மதிக்கிறோம். அதற்காக, கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு சின்னத்தில் நிற்க வாய்ப்பில்லை. செத்தாலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

நீங்கள் வேறு யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள். அவர்களுக்காக வேலை பார்க்கிறோம். திராவிடர் கழகம் போல எங்கள் கட்சியை நடத்திவிட்டு போகிறோம்.

திராவிட கட்சிகளை அழித்துவிட்டு மதவாத சக்திகள் காலூன்ற நினைக்கின்றன. அதற்கு ஒரு வாய்ப்பு வந்துவிடக் கூடாது என்பதால் அனைவரும் இணைந்து நிற்கிறோம். நாங்கள் சின்ன கட்சி தான். பெரிய சக்தி கிடையாது.

இந்த காலகட்டத்தில் எங்களை புண்படுத்த வேண்டாம். சீட் கொடுக்காவிட்டாலும் கூட 40 தொகுதிகளிலும் வேலை பார்க்கிறோம். தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு துரை வைகோ பேசினார்.

முன்னதாக, 'தனிச்சின்னத்தில் போட்டியிடுவதைவிடவும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிடலாமே?' என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, துரை வைகோ தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை கண்கலங்க விவரித்தார்.


நரேந்திர பாரதி - சிட்னி, ஆஸ்திரேலியா
25-மார்-2024 15:11 Report Abuse
நரேந்திர பாரதி அடுத்த எலக்ஷனுக்குள்ள நடந்திரும்
Rajarajan - Thanjavur, இந்தியா
25-மார்-2024 14:41 Report Abuse
Rajarajan இவரை கட்சிக்கு தலைமை தாங்க சொல்லி யாரும் அழைக்கவே இல்லை. அப்பாவும், மகனும் தாங்களே அறிவித்துக்கொண்டார்கள். பின்னர், இது தாங்காமல் ஒரு மானஸ்தர் ஈரோட்டில் ஒரு கசப்பான முடிவை எடுத்தார்.
Vijay D Ratnam - Chennai, இந்தியா
25-மார்-2024 14:40 Report Abuse
Vijay D Ratnam இந்தா மதிமுக தொண்டர்களின் குடும்ப வாக்குகள் விசிக மாதிரி சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலைக்கு விழப்போவுது என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. நேற்று மதிமுகவின் தூண் போல இருந்த கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறார். இன்று வைகோ மகன் ஒப்பாரி வைக்கிறார்.
ponssasi - chennai, இந்தியா
25-மார்-2024 13:07 Report Abuse
ponssasi துரை வைகோ அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். வைகோ போல உணர்ச்சிப் பிழம்பாக பேசவேண்டாம், அந்த இயக்கத்தில் நானும் ஆரம்பம் முதல் 2015 வரை பயணித்தவன், அனைத்து விதமான தேர்தல்களிலும் களப்பணியாற்றியவன் மாற்றம் கொண்டுவருவார் என பாத்து ஏமாத்த தொண்டன் நான்
Mani . V - Singapore, சிங்கப்பூர்
25-மார்-2024 08:17 Report Abuse
Mani . V அப்ப மாலை, மரியாதை, கொட்டு, முழக்கம் உறுதி. அனுதாபங்கள்.
Rajarajan - Thanjavur, இந்தியா
25-மார்-2024 05:56 Report Abuse
Rajarajan கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறகும் என்று. இவரது தந்தை இப்படித்தான் கண்கலங்கி பரிதாப ஓட்டுக்களை அறுவடை செய்வார். அதுசரி, இவருக்குத்தான் அரசியல் பிடிக்கவில்லையே. வலுக்கட்டாயமாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனால், அங்கு சென்று என்ன பேசுவார் ? இதுவே தனியார் நிறுவன வேலை என்றால், ஒருவருக்கு வேலை பிடிக்கவில்லையெனில், அவரை உடனே வெளியேற்றிவிடுவர். ஏனெனில், அவரால் எந்த பயனுமில்லை. ஆனால், இவர் மக்களின் வரிப்பணம், சொகுசு, சலுகைகளை பெற்றுக்கொண்டு, விருப்பமில்லாத பதவியில் இருப்பாராம். என்ன கொடுமை சார் இது. இல்லாத தொண்டர்கள் இருப்பதாக நினைத்து, எங்கே பொதுமக்கள் இவரை வாரிசு அரசியல் / குறுக்கு வழியில் வந்தவர் என கூறி பரிகாசம் செய்வர் என தானே முந்திக்கொள்கிறார். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி ஆரம்பித்துவிட்டு, எதிர்த்த அந்த கட்சி தலைவருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு, அவர் கட்சி கணக்கை காட்ட தயாரா என்று கேட்டுவிட்டு, தனது மகனையே வாரிசாக பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க வாய்ப்பு தந்துவிட்டு, இனியும் இந்த கட்சி அப்பா மற்றும் மகன் பொதுமக்கள் மத்தியில் அரசியல் செய்ய தகுதி இழந்துவிட்டனர். இனிமேலும், இவர்கள் பின்னால் செல்பவர், இவர்களுக்கு வாக்கு அளிப்பவர் தங்கள் சுய மரியாதையை பரிசோதனை செய்வது நல்லது. இவரது கூட்டணியில் போட்டியிடுவாராம். ஆனால், கட்சிக்கொடி மட்டும் இவர்களது சொந்தமாம். மாப்பிள்ளை இவர்தான், ஆனா இவர் போட்டிருக்கற சட்டை என்னோடது இல்ல.
Bharathi - Melbourne, ஆஸ்திரேலியா
24-மார்-2024 23:53 Report Abuse
Bharathi அப்பா போலவே பிள்ளையும் நல்ல அழுகாச்சி டிராமா போட்றார்யா.
R KUMAR - Oregon, யூ.எஸ்.ஏ
24-மார்-2024 21:41 Report Abuse
R KUMAR தங்கள் தந்தை தி.மு.க-வைப் பற்றியும், தற்போதைய முதல்வர் பற்றியும் பேசிய பழைய பேச்சுக்களை மீண்டும் படித்துப் பாருங்கள். திரு வை.கோ-வை கட்சியை விட்டு நீக்கிய சமயம், தீ குளித்த தொண்டர்களின் தியாகத்தையும் எண்ணிப்பாருங்கள். தற்போது தாங்கள் எள்ளி நகையாடிய அதே கட்சியிடம் சென்று பிச்சை எடுத்து ஒரு சீட்டுக்கு அல்லது இரண்டு சீட் பெரும் தங்கள் சுயமரியாதையை எண்ணி தங்கள் கட்சியினரே வேதனைப்படுகிறார்கள்
24-மார்-2024 16:21 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இந்த அவலச்சுவையைக் கண்டு மதிமுகவுக்கே ஒட்டு போடணும் .... என்ன மக்கழே ....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்