நிரந்தர ஊதியம் தேவை
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, நிரந்தர ஊதியம் கிடைப்பதில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களை போல, அவர்களுக்கும் நிரந்தர ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதை உறுதி செய்யும் கட்சிக்கே என் ஓட்டு.
பி.பாரதி, 56, திருவள்ளூர்.
சட்டம் கடுமையாக வேண்டும்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு, பிற நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. இங்கே சட்டம் இருந்தாலும், அமல்படுத்துவதில் வேகம் இல்லை. சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவார் என, நான் நம்பும் நபருக்கே என் ஓட்டு.
-யுவராணி, 27, அழகுகலைஞர், மதுரை.
வாசகர் கருத்து