Advertisement

சீட் கிடைக்காத விரக்தி நன்றி தெரிவித்த எம்.பி.,

மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில், கடந்த தேர்தலில் ராமலிங்கம் போட்டியிட்டு, 5 லட்சத்து, 99,292 ஓட்டுகள் பெற்று எம்.பி.,யானார். இந்நிலையில், இவரின் செயல்பாடு, கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் திருப்திகரமானதாக இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சி மயிலாடுதுறை தொகுதியை கேட்டு பெற்றது.

இதனால், எம்.பி., ராமலிங்கம் நேற்று தன் எம்.பி., லெட்டர்பேடில், 'வெற்றிகளால் அடக்கத்தையும், தோல்விகளால் ஊக்கத்தையும் பெறக் கூடியவர்களுக்கு வீழ்ச்சி என்பது எப்போதும் இல்லை' என்ற, மறைந்த முதல்வர் கருணாநிதி வசனத்தை குறிப்பிட்டு, 'ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின், கட்சியினர், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்