'நம்ம எம்.பி.,யா?' அதிர்ச்சியில் தி.மு.க.,வினர்

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி., நவாஸ்கனி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நவாஸ்கனியை மாவட்ட தலைநகர், கலெக்டர் அலுவலகங்களில் நடந்த அரசு விழாக்கள், தான் சார்ந்த மத அமைப்பின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடிந்தது. மற்றபடி தொகுதி பிரச்னைகள் குறித்தோ, தொகுதி மக்களை சந்தித்து குறைகளை தீர்ப்பதிலோ அவர் கவனம் செலுத்தவில்லை. தி.மு.க., அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளையே நவாஸ்கனி கண்டு கொள்வதில்லை.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், நவாஸ்கனி தி.மு.க., - காங்., பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை நேரடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்தும், முக்கிய ஜாதி தலைவர்கள், மத பிரதிநிதிகள், கிராம தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தும் ஆதரவு கேட்கிறார்.

இதனால் தி.மு.க, நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்