'தினமும் யோகா பண்ணுங்க' தி.மு.க., - எம்.பி., 'கூல்'

திண்டுக்கல்லின் சிட்டிங் தி.மு.க., - எம்.பி.,யான வேலுச்சாமிக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ள நிலையில், என்ன செய்வதென்று தெரியாமால் யோகா, தியானம் என மனதை திடப்படுத்தி வருவதோடு சமூக வலைதளங்களிலும் அதை பதிவிட்டு வருகிறார்.

திண்டுக்கல் தொகுதி தி.மு.க., கூட்டணி கட்சியான மா.கம்யூ.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.,வினரும், 2019 தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி.,யுமான வேலுச்சாமி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். மாவட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி எந்த நிகழ்ச்சி வைத்தாலும் முதல் ஆளாக சென்று நிற்கும் எம்.பி., வேலுச்சாமியை இரண்டு நாளாக காணவில்லை.

கட்சியினர் கேட்டால், 'தலைமை எடுத்த முடிவு; நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை' என்ற பேசி நழுவுகிறார். தற்போது தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மனதை திடப்படுத்தி வருவதாக தன் ஆதரவாளர்களுடன் கூறி வருகிறார். இதுவரை தான் பங்கேற்கும் நிகழ்ச்சியினை மட்டுமே தன் முகநுால் பக்கத்தில் பதிவிட்டு வந்த அவர், தற்போது, 'தியானம், யோகா நம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு புதிய பலத்தை அளிக்கிறது' என பதிவிட்டு வருகிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்