கிடைத்தது 'போதை' குஷியில் அ.தி.மு.க.,

ஜாபர் சாதிக் கைதையடுத்து தொகுதி வாரியான பிரசாரத்தின்போது, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும்படி, அ.தி.மு.க.,வினருக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருளால் எப்படி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கிறது என்பதை ஆதாரங்களோடு கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாக் அப் மரணம், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரின் மகன், மருமகள் ஆகியோர் சிறுமியை கொடுமைப்படுத்தியது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை நிறைவேற்றாத அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் மாதந்தோறும் மின் கணக்கீடு, காஸ் மானியம் வழங்காதது, 'நீட்' தேர்வு விவகாரத்தில் அரசியல் உள்ளிட்ட பிரச்னைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என, அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்