களமிறங்கும் அண்ணாமலை : காத்திருக்கும் சஸ்பென்ஸ்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, சில நாட்களில் தமிழக பா.ஜ., துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அடுத்த ஒன்பது மாதங்களில், தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அதில் இருந்து தன் செயல்பாடுகளை அதிரடியாக அமைத்துக் கொண்ட அண்ணாமலை, தி.மு.க., மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் முன் தைரியமாக வைத்தார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்தார். தோல்வி பரிசாகக் கிடைத்தது. ஆனாலும், சிறிதும் சோர்வடையாமல், தி.மு.க.,வையும், தமிழக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

ஆதாரங்களுடன் அவர் வைத்த வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபட்டன. அதையடுத்து, தமிழகத்தில் பெரிய அளவில் கட்டமைப்பு இன்றி தவித்த பா.ஜ.,வுக்கு மெல்ல மெல்ல கட்டமைப்பு உருவானது. கிராமந்தோறும் பா.ஜ., கொண்டு சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தினார். அதற்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் வந்தது. அதை வைத்து தான், அ.தி.மு.க., கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திக்க அண்ணாமலை தயாராகி விட்டார்.

இந்த முறை எப்படியும் பா.ஜ., இரண்டு இலக்க சதவீத ஓட்டுகள் பெறும் எண்ணத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார். பா.ஜ., உத்தேச வேட்பாளர் பட்டியலோடு சமீபத்தில் டில்லி சென்ற அண்ணாமலையிடம், அமித் ஷாவும், நட்டாவும், இம்முறை அண்ணாமலையும் போட்டியிட வேண்டும் என தலைமை விரும்புகிறது என கூறியுள்ளனர்.

'உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் நீங்கள் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டால், கணிசமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

'இந்த மூன்று தொகுதிகளில் கோவையில் கட்சி நல்ல கட்டமைப்புடன் உள்ளதால், அங்கேயே களம் இறங்கலாம். தலைவரே போட்டிக்கு களத்தில் வரும்போது, தொண்டர்களும் தமிழகம் முழுதும் உற்சாகமாக பணியாற்றுவர்' என கூறியுள்ளனர்.

தனக்கு அப்படியொரு எண்ணமே இல்லை என அண்ணாமலை மறுத்துள்ளார். ஆனால், போட்டியிட்டே ஆக வேண்டிய சூழல் உள்ளது என அமித் ஷாவும், நட்டாவும் அண்ணாமலையிடம் வலியுறுத்தி கூறியுள்ளதாகத்தெரிகிறது.

இதையடுத்து, டில்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலை, கோவைக்கு சென்று கட்சியின் உள்ளூர் தலைவர்களை அழைத்து பேசி, தொகுதி நிலவரம் குறித்து முழுமையாக கேட்டறிந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அண்ணாமலையைப் போல், மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் நீலகிரி தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டியல்

அண்ணாமலை டில்லிக்கு கொண்டு சென்ற உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. கோவை - அண்ணாமலை, திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், தென் சென்னை - ஹெச்.ராஜா, கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சி - பேராசிரியர் சீனிவாசன், ராமநாதபுரம் - கருப்பு முருகானந்தம், தென்காசி - ஜான்பாண்டியன், வேலுார் - ஏ.சி.சண்முகம், துாத்துக்குடி - சசிகலா புஷ்பா, விருதுநகர் - ராதிகா, ஸ்ரீபெரும்புதுார் - காயத்ரிதேவி, பெரம்பலுார் - பாரிவேந்தர், மத்திய சென்னை - வினோஜ் பி செல்வம் - நீலகிரி - எல்.முருகன்.


Rajathi Rajan - Thiravida Naadu, இந்தியா
11-மார்-2024 11:59 Report Abuse
Rajathi Rajan மலை மண்ணை கவ்வ போவது உறுதி....
11-மார்-2024 11:08 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பாஜக திமுக கூட்டணி உருவாகப்போவதன் அறிகுறி இது ...... அண்ணாமலை அதற்கு முதல் பலி .... எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அடுத்த என் டி ஏ ஆட்சியின் அமைச்சரவையில் திமுக பங்குபெறும் ....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்