ஸ்டாலின் நாமதேயஸ்ய... அமைச்சர் மஸ்தான் அர்ச்சனை

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரான தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வேட்பாளர் பட்டியலை, திண்டிவனம் அடுத்த தீவனுாரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து பிரபலமானார்.

மேலும், அவர் கோவில்களுக்கு எப்போது சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பெயருக்கு அர்ச்சனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி கடந்த 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பொய்யாமொழி விநாயகர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் மஸ்தான், முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், அமைச்சர்கள் வேலு, நேரு உள்ளிட்டோர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார்.

'முதல்வர் ஸ்டாலினுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை. இருந்தாலும், அவர் பெயரில் அமைச்சர் அர்ச்சனை செய்தது, எங்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது' என்கின்றனர் கட்சியினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்