நாட்டை 2 பேர் விற்கின்றனர் 2 பேர் வாங்குகின்றனர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத் தில் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:

பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்தியாவில் தனி நபர் கடன் 44,000 ரூபா யாக இருந்தது. இப்போது 1 லட்சத்து 20,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.உலக அளவில் தொழில் துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் வெளியேறி விட்டன. வேலை வாய்ப்பை உருவாக்கு வேன் என கூறிய மோடி, இருந்த வேலை வாய்ப்பையும் இல்லாமல் செய்து விட்டார். பிரதமர் மோடியின் ஊழல் பட்டியலை மேடை போட்டு பேச வேண்டி வரும். இந்தியாவை 2 பேர் விற்கின்றனர். 2 பேர் வாங் குகின்றனர். மோடியும், அமித் ஷாவும் விற்கின்றனர். அதானி யும், அம்பானியும் வாங்குகின் றனர். இனியும் மக்களை மோடி ஏமாற்ற முடியாது. இவ்வாறு அமைச்சர் மஸ்தான் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்