சென்னை: காலாகாலமாக குறியீடுகள் மூலம் தங்கள் கருத்துக்களை உணர்த்த உலக அளவில் அரசியல் தலைவர்கள் பலர் முயற்சி மேற்கொள்வர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்வரை பலர் தங்கள் உடைகள், வாகனங்கள், அணியும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றில் குறியீட்டு அரசியல் செய்வது வழக்கம்.
குறியீட்டு அரசியலுக்கு மிகவும் பிரபலமானவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தான் அணியும் வித்தியாசமான சாக்ஸ் மூலமாக அவ்வப்போது அரசியலை வெளிப்படுத்துவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்திருந்தார். அப்போது கனடாவில் நிலவிவரும் காலிஸ்தான் விவகாரத்தை விளக்கும் ஓவியம் கொண்ட சாக்ஸ் அணிந்திருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதேபோல தனது வித்தியாசமான சாக்ஸ் மூலமாக உலக அரசியல் குறியீடுகளை அவர் வெளிப்படுத்துவது வாடிக்கை.தற்போது தமிழ் சினிமா நடிகர்களும் இந்த குறியீட்டு அரசியல் கோதாவில் இறங்கி விட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இன்று காலை மனைவி ஷாலினியுடன் வாக்குப்பதிவு செய்ய நடிகர் அஜித் வந்திருந்தபோது அவர் அணிந்திருந்த மாஸ்க் தற்போது பேசுபொருளாக உள்ளது. கருப்பும் சிவப்பும் கலந்த அவர் மாஸ்க் அணிந்து இருந்தார். இதனால் திமுகவுக்கு அவர் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் வாக்கு செலுத்த நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்றது காலை முதலே வைரலாகி வருகிறது. இவரது சைக்கிளில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறம் இருந்தது. இதன் காரணமாக விஜயம் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
இதுபோன்ற குறியீடுகளை இந்த நடிகர்கள் நிஜமாகவே வைத்து இருந்தார்களா அல்லது தற்செயலாக இவை அமைந்ததா என யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் பொதுவாகவே ஒரு பாணி கையாளப்படுகிறது. குறிப்பிட்ட பிரபலங்கள் அணியும் டீ சர்ட் முதல் ஷூ வரை அனைத்திலும் குறியீடு கண்டுபிடிப்பது நெட்டிசன்களின் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது.
ஆனால் இதில் பரிதாபமான உண்மை என்னவென்றால் பெரும்பாலான பிரபலங்கள் இயல்பாக ஆடைகளை அணிந்து வெளியே செல்கின்றனர். தற்செயலாக இது ஒரு கட்சியின் கொடி நிறத்தில் இருந்தால், உடனே அந்த குறிப்பிட்ட பிரபலம் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒருவருக்கும் ஒரு லாபமும் இல்லை என்பது தெளிவாகிறது.
விஜய்யின் சைக்கிள், அஜித்தின் மாஸ்க் நிறங்கள்; குறியீட்டு அரசியலால் யாருக்கு லாபம்?
தமிழ் நடிகர்கள் மட்டும் தான் அரசியல் தலைவர்கள், அறிவியல் விஞ்ஞானிகல் , பொருளாதார நிபுணர்கள் , சட்ட வல்லுநர்கள் கல்வி மேதைகள் , மருத்துவ வித்தகர்கள் எல்லாமே அவர்களுக்கு தெரியும் அவர்கள் அசைவுகள், செயல்கள், சொற்கள் , அவர்கள் எல்லாவற்றரிற்கும் பேட்டி கொடுதாகே வேண்டும் ஒரு சராசரி விவசாயி , நாட்டை காக்கும் சிப்பாய் , உயிரை காக்கும் மருத்துவர்கள் , செவிலியர்கள், கல்வியாளர்கள் விஞ்ஞானிகள் போன்றோருக்கு நடிகர்களை போன்று ஒன்றும் தெரியாதுதான் நடிகர்களுக்கு ஏன் இந்த விளம்பரம், அவர்களை சம்பாதிக்க வைத்து அவர்களை தலைவர்களை சேயும் தமிழக மக்களே , என்ன சொல்வது
ஹலோ ரஷீல் : அதென்ன அவ்வளவு ஈஸியாக, " - Connecticut,யூ.எஸ்.ஏ
06-ஏப்-2021 20:45
பல நூறு கோடி திருட்டு தனமாக வரி காட்டாமல் சேர்த்து.." என்று சொல்லி விட்டீர்கள். உங்க ஜீ தானே ஆட்சியில்? என்னவோ சிறந்த நிர்வாகம், வரி ஏய்ப்பு குறைந்து விட்டது என்று ஸீன் போடறீங்கபோன மாசம் ரெய்டு வுட்டாங்க ளே...என்ன ஆச்சு??? தளபதி.விஜய், தல அஜீத் வரி ஏய்ப்பு என்றால் தூக்கி உள்ள போடறது?? முடியல? அதுக்கெல்லாம் ஆதாரம் வேண்டும். பொய்யா ஸீன் போட்டால்?? முடியாது..இல்லியா..அப்போ.இதுமாதிரி லாம் கதறக்கூடாது.
வாக்களிக்க அஜித் அண்ணன் கருப்பு உடையில் வந்தார்,கருப்பு சிகப்பு கலரில் face cover மாட்டியிருந்தார்.ஜோசப்பு விஜயண்ணா கருப்பு சிகப்பு வண்ண சைக்கிளில் வந்தார், விக்ரம் எனும் கென்னடி நடந்து வந்தார்,என ஏகப்பட்ட பரபரப்பு செய்திகள்.இதை கிளப்பிவிடுபவன் யாரென்றால் முழுக்க முழுக்க திமுக உபிஸ். இவர்களாக அப்படி ஒரு அரசுக்கு எதிரான கருத்தை கிளப்பிவிடுகின்றார்கள்.சரி,ஒருவேளை நடிகர்கள் கூட்டத்துக்கு பழனிச்சாமி மேல் கோபம் இருக்குமா? நிச்சயம் இருக்கும் காமராஜருக்கு பின் திரைத் துறை அல்லாமல் 5 வருடம் ஆண்ட முதல் முதல்வர் பழனிச்சாமி.அதற்கு முன் பன்னீர் செல்வம் எனும் நடிகர் அல்லாத அரசியல்வாதி இருந்தார்.பழனிச்சாமி ஆட்சியில் முதல்வர்கள் சினிமா மேடைகளில் அமரும் அவமானமில்லை."பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா"எனும் இம்சை இல்லை. முதல்வர் ஏதோ சோழ மன்னன் போல் அமர்ந்திருக்க, பாணர்கள் போல் திரைக் கவிஞர்கள் கவிதை வாசிக்க, கணிகையர் போல் நடிகையர் நடனம் ஆட, அந்தக் கலாச்சாரம் பழனிச்சாமி ஆட்சியில் இல்லை.எந்த நடிகனையும் அவர் வலிய சென்று சந்திக்கவில்லை. திரைத்துறை பக்கமே அவர் திரும்பவில்லை. சினிமாவுக்கு வரிவிலக்கு,சினிமா வளர உதவி என்றெல்லாம் அவர் சொன்னதே இல்லை. சுருக்கமாக சொன்னால் காமராஜர் கூட சில சினிமா விழாக்களில் பங்குபெற்றிருந்தார். ஆனால் ராஜாஜிதான் இதிலெல்லாம் சிக்கவில்லை.ஆக ராஜாஜிக்குப் பின் ஒரு முதல்வர் அதாவது கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு பின் சினிமா வாசனையே இல்லாத முதல்வர் பழனிச்சாமிதான். அவர் முன் தங்கள் வித்தை வீண்,வெட்டி விளம்பரம்,மாய காட்சிகள் எடுபடாத சினிமாதுறையினர் அவர் மேல் கோபத்தில் வந்திருக்கவாய்ப்பு இருக்கின்றது.சரி,திமுகவின் உபிக்கள்தான் அரசுக்கு எதிராக "குறியீடு"காட்டி நடிகர்கள் வந்ததாக அள்ளிவிடுகின்றார்கள் என்றால்?நடிகர்கள் ஏன் அதை மறுக்கவுமில்லை, ஒப்புகொள்ளவுமில்லை?அதுதான் நடிகர்கள்,ஆம் அவர்கள் தாங்கள் அரசை எதிர்த்தோம் என்றாலும் ஆபத்து, எதிர்க்கவில்லை என்றாலும் ஆபத்து என்பதை உணர்ந்தவர்கள்.
Ram - Thanjavur,இந்தியா
07-ஏப்-2021 09:50 Report Abuse
tirou - EVRY,பிரான்ஸ்
07-ஏப்-2021 13:22Report Abuse
Karthikeyan K Y - Chennai,இந்தியா
07-ஏப்-2021 08:49 Report Abuse

pazhaniappan - chennai,இந்தியா
07-ஏப்-2021 07:01 Report Abuse
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-2021 00:44 Report Abuse
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-2021 00:42 Report Abuse

Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-ஏப்-2021 23:53 Report Abuse
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
07-ஏப்-2021 07:20Report Abuse
மனுநீதி - ,
07-ஏப்-2021 07:27Report Abuse
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-ஏப்-2021 23:50 Report Abuse
அன்பு - தஞ்சை,கனடா
06-ஏப்-2021 23:32 Report Abuse
R.Kalyanaraman - Chennai,இந்தியா
07-ஏப்-2021 09:48Report Abuse
SUBBU - MADURAI,இந்தியா
06-ஏப்-2021 22:58 Report Abuse

தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஏப்-2021 22:47 Report Abuse
மேலும் 72 கருத்துக்கள்...