ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்த தொகுதி : தி.மு.க.,- வி.சி.க, பேச்சுவார்த்தையில் இழுபறி

வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா போட்டியிட தொகுதி முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிரபல லாட்டரி அதிபர் கோவை மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. சமீபத்தில், திருச்சியில் நடந்த வி.சி.க., மாநாட்டில் அக்கட்சியில் சேர்ந்தார். அவருக்கு துணை பொதுச்செயலர் பதவி உடனடியாக வழங்கப்பட்டது. கடந்த தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார், வெற்றி பெற்றனர். தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., கட்சி, வரும் லோக்சபா தேர்தலில், 4 தொகுதிகளை கேட்டுள்ளது. அதில், ஒன்று பொது தொகுதியாக கோரப்பட்டுள்ளது.

கூட்டணியில், தி.மு.க.,விற்கு அடுத்தபடி, வலுவான ஓட்டு வங்கி வைத்துள்ள தங்களுக்கு கூடுதலாக ஒரு தொகுதியாவது வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஆதவ் அரஜுனா போட்டியிடுவதற்காக கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் விருப்ப பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.

வி.சி., கட்சிக்கான மூன்றாவது தொகுதி முடிவானதும், தி.மு.க., தலைமையுடன் தொகுதி பங்கீடு வெளியாகும் என வி.சி., கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்