Advertisement

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெல்லும்: கே.பி.முனுசாமி நம்பிக்கை

"லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிவெல்லும்" என. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி பேசியதாவது: பா.ஜ.,விற்கு செல்வாக்கு உயர்ந்து உள்ளது எனில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களை இங்கு போட்டியிட வைக்கட்டும். தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் களமிறங்கட்டும். தமிழக மக்கள் எவ்வாறு பாடம் புகட்டுவார்கள் என தெரிந்து கொள்வீர்கள்.

தமிழக மக்கள் மிகவும் அரசியல் ஞானம் உள்ளவர்கள். லோக்சபா தேர்தலில் பா.ஜ., 300 தொகுதிகளில் வெல்லலாம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்