நாட்டில் அநீதியின் இருள் சூழ்ந்துள்ளது: சோனியா காந்தி

"மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும்" என, காங்கிரஸ் எம்.பி., சோனியா காந்தி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ., தங்கள் கட்சியில் சேர வேண்டும் எனக் கூறி மிரட்டுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இன்று ஆபத்தில் இருக்கிறது.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு பா.ஜ., சதி செய்கிறது. நாடு முழுவதும் இன்று அநீதியின் இருள் சூழ்ந்துள்ளது. நீதியை காக்க நாம் அனைவரும் பா.ஜ., வுக்கு எதிராக போராட வேண்டும்.

மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும்.

பிரதமர் மோடி தன்னைப் பெரியவராக நினைத்துக் கொண்டு கண்ணியத்தை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய நாடு என்பது ஒரு சிலரின் சொத்து கிடையாது, அவை அனைவருக்கும் பொதுவானது. இதற்காக பலர் ரத்தம் சிந்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


A1Suresh - Delhi, இந்தியா
07-ஏப்-2024 11:22 Report Abuse
A1Suresh "பாரத் ஜோடோ நியாய யாத்திரை" என்று பெயர் வைத்தீர்களே. அருணாசல பிரதேசத்திற்கு ஏன் செல்லவில்லை. இதுவே பெரிய அநியாயம் ஆயிற்றே
P.Sekaran - விருத்தாசலம், இந்தியா
07-ஏப்-2024 10:50 Report Abuse
P.Sekaran மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று ஊழல் செய்து இவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று முறையிட்டு மக்களிடம் கொண்டு செல்லலாமே அதை விட்டு ஏதோ மேற்போக்காக குற்றம்சாட்டுவது எந்தவிதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை. ஊழல் செய்வதை தடுக்கிறதே என்ற வருத்தம்தான்
sankar - Nellai, இந்தியா
07-ஏப்-2024 09:44 Report Abuse
sankar ஆமாம் - அந்த இருள் - இன்டி கூட்டணி வடிவில் உள்ளது - அதில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை பார்த்தாலே தெரியும்
ramani - dharmaapuri, இந்தியா
07-ஏப்-2024 08:12 Report Abuse
ramani உங்களை தோற்கடித்து துரத்தி விட்டாலே போதும் நாட்டில் சூழ்ந்துள்ள அநீதி இருள் விலகி விடும். நீங்க தான் அந்த அநீதி இருள் என்று இன்னும் புரியவில்லையா
VENKATASUBRAMANIAN - bangalore, இந்தியா
07-ஏப்-2024 08:01 Report Abuse
VENKATASUBRAMANIAN நல்ல காமெடி ஜாமினில் இருக்கும் குடும்பம் இதை கூறுகிறது
Kalaiselvan Periasamy - kuala lumpur, மலேஷியா
07-ஏப்-2024 05:42 Report Abuse
Kalaiselvan Periasamy நீங்களே உண்மையை கூற்றுங்கள் சோனியா அவர்களே மோடி ஆட்சியில் காங்கிரஸ் செய்த குளறுபடிகளை சரி செய்யவே பல அந்நாடுகள் தேவை . பெரும்பான்மையினரை அவலமாக நடத்திய காங்கிரஸ் , இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் . மோடி சில தவறுகள் செய்து இருக்கலாம் , ஆனால் நாடு பல மடங்கு முன்னேறி உள்ளதை உங்களால் மறுக்க முடியுமா ? யோசியுங்கள் .
Krishnan - Coimbatore, இந்தியா
07-ஏப்-2024 04:09 Report Abuse
Krishnan அயல் நாட்டுக்காரிக்கு இந்திய நாட்டு அநீதிகளை பற்றி பேச தகுதி இல்லை.
நரேந்திர பாரதி - சிட்னி, ஆஸ்திரேலியா
07-ஏப்-2024 03:52 Report Abuse
நரேந்திர பாரதி "நாடு முழுவதும் இன்று அநீதியின் இருள் சூழ்ந்துள்ளது."... மலஹாசனிடம் டார்ச் லைட் வாங்கி உபயோகப் படுத்தவும்
RAJ - dammam, சவுதி அரேபியா
07-ஏப்-2024 02:19 Report Abuse
RAJ சோனியா ஜி, இந்தியா மற்றும் மாண்புமிகு பிரதமர் பற்றி பேச உங்களுக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லை. காங்கிரஸ் கட்சியால், பல ஆண்டுகளாக இந்தியா அழிந்து போனது. மோடி ஜி புதிய இந்தியாவை உருவாக்குகிறார். காங்கிரஸின் தந்திரத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே முதலைக் கண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
J.V. Iyer - Singapore, சிங்கப்பூர்
06-ஏப்-2024 18:29 Report Abuse
J.V. Iyer நாட்டை கொள்ளை அடிப்பவர்களை சிறையில் தள்ளினால் இப்படித்தான். ஷைத்தான்கள் திருநீறு பூசி நடிப்பார்கள்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்