வரலாற்றை மாற்றிவிட முடியாது : பா.ஜ.,வை சாடிய ராகுல்காந்தி

"லோக்சபா தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் மோதல்" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் துவங்க இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ., அரசின் 10 ஆண்டுகால செயல்பாடுகளை விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியோ, காங்கிரஸ் அரசின் ஊழல்களையும் மாநிலக் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசி வருகிறது. இதனால் அரசியல் களமே அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'லோக்சபா தேர்தலை இரண்டு சித்தாத்தங்களுக்கு இடையே நடக்கும் மோதல்' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

ஒருபக்கம் இந்தியாவை எப்போதும் ஒருங்கிணைத்த காங்கிரசும் மற்றொரு பக்கம் மக்களைப் பிரிக்க முயல்பவர்களும் இருக்கிறார்கள்.

நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களின் பக்கம் கைகோர்த்து அவர்களை பலப்படுத்தியவர்கள் யார்.. நாட்டின் சுதந்திரத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் கைகோர்த்து நின்றவர்கள் யார் என்பதற்கு வரலாறே சாட்சி.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் நின்றவர்கள் யார்... இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக நின்றது யார் என்பது மக்களுக்குத் தெரியும்.

அரசியலுக்காக பொய்களை வாரியிறைப்பதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


angbu ganesh - chennai, இந்தியா
11-ஏப்-2024 10:21 Report Abuse
angbu ganesh எப்படிப்பா மாத்த முடியும் முதல் வகுப்பிலே இருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் அதே வரலாறுதான்
vbs manian - hyderabad, இந்தியா
11-ஏப்-2024 09:47 Report Abuse
vbs manian ஒரு சித்தாந்தமும் இல்லை. ஊழலுக்கும் நேர்மைக்கும் இடையே நடக்கும் யுத்தம் இந்த தேர்தல். இந்தியா இப்போது ஆரோக்கியத்துடன் கபிரமாக நடக்கிறது.
Siva Subramaniam - Coimbatore, இந்தியா
11-ஏப்-2024 05:48 Report Abuse
Siva Subramaniam வரலாற்றை எப்படி மாற்ற முடியும் - அந்தக அளவுக்கு இவர்களே மாற்றி இருக்கிறார்களே - சுதந்திரம் வாங்கியது முதல்.
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
10-ஏப்-2024 22:36 Report Abuse
R.MURALIKRISHNAN அது காந்தி காங்கிரஸ். தமிழ்நாடு முதல்வர் போல காந்தி என்ற ஸ்டிக்கரை மட்டும் வைத்துக் கொண்டு காங்கிரஸ் என்று சொல்லி கொண்டு அலைகின்ற . உம்மை போன்றவர்களால் நாட்டிற்கு என்ன பயன்
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
10-ஏப்-2024 18:41 Report Abuse
R.MURALIKRISHNAN மோடி வந்த பிறகுதான் காஷ்மீரிலே சுதந்திரமாக இந்தியர்கள் நடமாட முடிகிறது. இப்போது புரிகிறதா ராகுல்ஜி இந்தியாவை ஒருமிப்பது மோடி தான். காங்கிரஸ் அல்ல அது சரி உங்க கட்சியையே உங்களால் ஒருங்கிணைக்க முடியலயே ஏன் ஜி
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்