பா.ஜ., வென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் மாறும்: ராகுல் காந்தி ஆவேசம்

"சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து நாட்டை நடத்துவதற்கான முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது" என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனைக் கண்டித்து ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் அணி) சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அகிலேஷ் யாதவ், வி.சி., தலைவர் திருமாவளவன், தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பேரணியில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, "எனது கணவரை சிறையில் அடைத்துள்ளனர். அவர் உண்மையான தேசபக்தர். அவர் சிறையில் இருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டுமென பா.ஜ.,வினர் கூறுகின்றனர். அவர் மிக நேர்மையானவர்" எனக் கூறிவிட்டு, கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்தார்.

அந்தக் கடிதத்தில், 'உங்களிடம் நான் ஓட்டு கேட்கவில்லை. 140 கோடி இந்தியர்களும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது, நமது நாடு. சிறையில் இருந்தாலும் எப்போதும் பாரத மாதாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

எங்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டனர். தேர்தல் நேரத்தில் சுவரொட்டி அச்சடிப்பது முதல் பல்வேறு வேலைகள் உள்ளன. ஆனால், பணத்தை எடுக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டனர்.

சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து நாட்டை நடத்துவதற்கான முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. என்னை தேர்தலில் போட்டியிட வைக்க முடியாமல் தடுக்கவும் பா.ஜ., சதிவேலையை செய்து வருகிறது.

காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கம்,. முதல்வர்கள் கைது என ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பா.ஜ., ஈடுபடுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் 180 இடங்களில் கூட பா.ஜ., வெல்ல முடியாது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு பா.ஜ., முயற்சி செய்யும். அவ்வாறு செய்தால், நாடு தீப்பற்றி எரியக் கூடிய சூழல் உருவாகும். அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Mohan - Salem, இந்தியா
04-ஏப்-2024 07:51 Report Abuse
Mohan பா.ஜ.க. மாற்றுவது பற்றி ஆரூடம் சொல்கிற அறிவிலியே உங்களது பாட்டி இந்திரா பெரோஸ்கான் காந்தி கிரிமினல் தனமாக எமர்ஜென்சியில் தன்னிச்சையாக பாராளுமன்ற ஒப்புதல் இன்றி திருட்டுத்தனமாக நம் அரசியலமைப்பு சட்டத்தில் secularism என்ற புது டுபாக்கூர் ஷரத்தை நுழைத்து விட்டார். அதை வைத்து இப்பொழுதும் அரசியல் லாபம் பார்க்கிரீர்கள். அம்பேத்கர் தேவையற்றது என கருதிய ஷரத்தை கான்கிரஸ் தனது சுயலாபத்திற்கு திருத்தியது எவ்வளவோ?
Ramesh Sargam - Back in Bengaluru, India., இந்தியா
01-ஏப்-2024 10:58 Report Abuse
Ramesh Sargam பா.ஜ., வென்றால் ஊழல்வாதிகளின் கோட்டை மொத்தமாக தகர்க்கப்படும்.
beindian - doha, கத்தார்
01-ஏப்-2024 10:35 Report Abuse
beindian எப்படி சொன்னாலும் இந்த வடக்கனுகளுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரிதான் திருந்தவே மாட்டாங்க
01-ஏப்-2024 10:17 Report Abuse
ஜெகதீஸ்வரன் தண்டபானி நம் நாட்டின் அரசியல் சாசனத்தை எத்தனை முறை காங்கிரஸ் மாற்றி உள்ளது? அந்த உரிமை காங்கிரஸுக்கு மட்டும் தான் உள்ளதா? பெரும்பான்மை இருந்தால் எந்த அரசாங்கமும் மக்கள் விருப்பதோடு அதை மாற்றலாம்? நீங்கள் பெரும்பான்மை பெறும்போது அவற்றை நீக்கி விடலாம்? அது தான் ஜனநாயக நடை முறை .
Muralidharan raghavan - coimbatore, இந்தியா
01-ஏப்-2024 10:02 Report Abuse
Muralidharan raghavan மாறவேண்டும், மாற்றவேண்டும். காங்கிரஸ் கட்சி செய்த பல வரலாற்று தவறுகளை மோடி சரிசெய்து வருகிறார்
vbs manian - hyderabad, இந்தியா
01-ஏப்-2024 08:41 Report Abuse
vbs manian இவர்கள் எதனை முறை அரசியல் அமைப்பு சட்டத்தை தங்களுக்கு சாதகமாக திறுத்தினார்கள்.
வாய்மையே வெல்லும் - மனாமா, பஹ்ரைன்
01-ஏப்-2024 06:32 Report Abuse
வாய்மையே வெல்லும் அறுபது ஆண்டாக இயற்றி கம்பனி தனிமனித ஆட்களிடம் வரி வசூல் வேட்டை செய்துவிட்டு ,, தனக்கென்று வரும்போது ...வரி பூகம்பம் பாஜக செய்கிறது என பித்தலாட்டம் செய்பவர்களை ஒருபோதும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள். நேர்மையான ஆட்களாக இருந்தால் நீங்க நாடவேண்டியது கோர்ட் வாசப்படி.. மைக் பிடிச்சுட்டு பாஜக சாடலுக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல. உங்கமேல குற்றம் இல்லாட்டி நிரூபியுங்கள் இல்லாங்காட்டி பணத்தை கட்டிட்டு அரசியல் மேடையில் பேச்சு பலமாக இருக்கட்டும்.. ஊருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு பிரச்சனை என்றால் தக்காளி சட்னி என்றால் வேலைக்கே ஆகாது ..நியாயம் தர்மம் ஆட்சியை பிடிக்க ஸர்வப்ரயத்னம் எடுக்கும் நீங்க உத்தமர்களா ? இல்லவே இல்ல
Kalyan Singapore - Singapore, சிங்கப்பூர்
31-மார்-2024 18:05 Report Abuse
Kalyan Singapore உங்கள் சட்டபடி சில சட்டங்களை மாற்றியதும் 5 ஆண்டுகள் முடிந்து 6 வது ஆண்டில் .சட்டப்படி பார்த்தால் அவருக்கு அந்த அதிகாரம் இருக்கவில்லை . சில திருத்தல்களில் ( வாங்கி தேசிய உடமையாக்கள் , அரசர்களின் பென்ஷன் போன்ற சிலவற்றில் நீதி மன்றம் போக முடியாது என்றும் சேர்த்திருந்தார் )
Sami Sam - chidambaram, இந்தியா
31-மார்-2024 17:39 Report Abuse
Sami Sam காலத்திற்கேற்ப அரசியல் சாசன சட்டங்களை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை இட ஒதுக்கீடு பட்டியல் இனத்தவர் அவர்களுக்கு சலுகை என்பது ஆரம்ப காலத்தில் 25 வருடம் வரை என்றும் அதற்குமேல் நீட்டிக்கப்படக்கூடாது என்றுதான் சட்டம் சொன்னது அதனை எத்தனை முறை நீட்டித்தார்கள் பல சட்டங்கள் திருத்தம் செய்தும் மாற்றம் செய்தும் நடைமுறையில் உள்ளது
Suppan - Mumbai, இந்தியா
31-மார்-2024 16:19 Report Abuse
Suppan உங்க பாட்டி எவ்வளவு முறை அரசியல் சட்டத்தை மாற்றியிருக்கிறார் என்று யாராவது சொல்லியிருகிறார்களா? அது புரியுமா? இது வரை 106 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்