'புல்லட், 5 சவரன் செயின்' ஆசை காட்டும் தி.மு.க.,

'அதிக ஓட்டுகளை வாங்கி தரும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு புல்லட் பைக், 5 சவரன் செயின் வழங்கப்படும்; வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும்' என கட்சியினருக்கு, தி.மு.க., வேட்பாளர்கள் தரப்பில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் ஜூன் 3ம் தேதி, கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாளில், தமிழகத்தில் 39; புதுச்சேரி என, 40 தொகுதிகளிலும், 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், வேட்பாளர்களுக்கு, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணிகள் தொடர்பாக, பிரசாரம் முடிந்ததும் தினமும் இரவு வேட்பாளர், பொறுப்பு அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. அதில், 'அதிக ஓட்டுகளை வாங்கி தரும் பூத், வார்டு, ஒன்றிய நிர்வாகிகளுக்கு புல்லட் பைக், 5 சவரன் செயின், மோதிரம் பரிசாக வழங்கப்படும்; அதுவும் முதல்வர் ஸ்டாலின் கையால் வழங்கப்படும். வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படும்' என, அரக்கோணம், வேலுார், ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் தரப்பில், கட்சியினருக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

இதே போல், வேலுாரில் பா.ஜ.,வும், சேலம், கோவையில் அ.தி.மு.க., தரப்பிலும், அதிக ஓட்டுகளை வாங்கி தரும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்