ஓட்டுக்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள, ராஜன் நகர், செல்வா நகர் மற்றும் ஹனுமன் காலனி பொதுநலச் சங்கம் சார்பில், 'எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கு பணமோ, பொருட்களோ வழங்கக் கூடாது' என, பேனர் வைத்துள்ளனர்.

'எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற தலைப்பில், '‛எங்கள் பகுதியில் எந்தவொரு அரசியல் கட்சிகளும் மற்றும் தனிநபர்களும் ஓட்டுக்காக பணமோ, பரிசு பொருட்களோ கொடுக்கக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவீர்கள்; ஜனநாயக கடமையாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டுகிறோம்'' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுநலச் சங்க செயலர் தங்கவேலு கூறுகையில், ''எங்கள் பகுதியில், 1,200 ஓட்டுகள் உள்ளன. லோக்சபா தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என விரும்புகிறோம். எங்கள் பகுதியில், ஓட்டுக்கு, பணம் பொருட்கள் கொடுப்பதாக தெரிந்தால், உடனே காவல் கட்டுப்பாட்டு அறை, நீலாங்கரை காவல் நிலையம், உதவி தேர்தல் அலுவலரிடம் தெரிவிப்போம்,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்