கோவையில் முகாமிட்டுள்ள வெளிமாநில பைனான்சியர்கள்!

கோவை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்று தி.மு.க.,வும், கோவை என்றுமே எங்கள் கோட்டை என்பதை நிரூபிக்க அ.தி.மு.க.,வும், களம் கண்டுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, ஒரு கோடி ரூபாய், நகராட்சிகளில் 40 முதல், 50 லட்சம் ரூபாய்,பேரூராட்சிகளில், 15-30 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும் என, அரசியல் கட்சியினர்கணக்கிட்டுள்ளனர். தேர்தல் செலவுகளுக்கு கடன் கொடுக்க கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில 'பைனான்சியர்கள்' கோவைக்கு பணத்துடன் படை எடுத்துள்ளனர்.

இந்த பைனான்சியர்களிடம் வீடு, நில பத்திரத்தை அடமானம் வைத்தால், ஒரு மணி நேரத்தில் பணம் கிடைத்து விடுவதாக, அரசியல் கட்சியினர் தகவல் கூறுகின்றனர்.சொத்துக்கள், நகைகளை விற்க சம்மதம் என்றால், இந்த 'பைனான்சியர்கள்' வீடு தேடி சென்று பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறுகையில், 'தேர்தல் நேரத்தில் அண்டை மாநில பைனான்சியர்கள் பிற மாநிலத்துக்கு சென்று, அடமானத்துக்கு பணம் கொடுப்பது வழக்கமான பிசினஸ் தான். அடமானம் வைத்து, தகுந்த ஆவணங்களுடன் பணம் வாங்கிசெல்வதால், பறக்கும் படையினர் சோதனையில் பிரச்னை ஏற்படுவதில்லை' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)