நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல், பரிசீலனை முடிந்த நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
அத்துடன் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,- மக்கள் நீதி மய்யம் - நாம் தமிழர் கட்சியினர் உட்பட அனைத்து கட்சியினரும், தங்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர்.
![]() |
அப்போது, தேர்தல் பிரசாரம் செய்யும் முறை, எதிர் வேட்பாளர்களிடம் சிக்காமல் வாக்காளர்களுக்கு பணம், பரிசு எப்படி பட்டுவாடா செய்வது என ஆலோசித்துள்ளனர்.இதில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள், 'சீட்' கிடைக்காமல் விரக்தியில் உள்ள சொந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்குச் சென்று, சால்வை அணிவித்து பிரசாரத்திற்கு அழைக்கின்றனர்.
'கட்சி தான் சீட் வழங்கி உள்ளது. என் மீது கோபப்படாமல், தீவிரமாக உழைத்து, கட்சியை வெற்றியடையச் செய்ய வேண்டும்' என, ஆதரவு கேட்கின்றனர்.அத்துடன், அவர்களின் வீட்டில் உள்ள தந்தை, தாய் காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெறுகின்றனர்.
![]() |
மேலும், சீட் கிடைக்காமல் கோபத்தில் உள்ளவர்கள், எதிர் கோஷ்டி என ஒதுங்கி இருப்பவர்களின் கோபத்தை தணிக்க, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழியாகவும் பேசி, 'சரிக்கட்டும்' வேலையிலும் இறங்கிஉள்ளனர்.
இன்று, வேட்புமனு வாபஸ் பெறுவது முடிந்ததும், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து