சீன எல்லை பிரச்னை குறித்து பிரதமர் பேசுவாரா: கனிமொழி கேள்வி

"அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவுக்கு நம் நாட்டுக்குள் சீனாவை ஊடுருவ, மத்திய பா.ஜ., அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது" என, தூத்துக்குடி தி.மு.க., வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயர்களுக்கு புதிய பெயர்களை சூட்டி, தங்கள் வரைபடத்தில் சீனா சேர்த்துள்ளது.

சீனாவின் அத்துமீறல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் இன்றும் நேற்றும் நாளையும் தொடரும்.

நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது. சீனாவின் செயல்கள், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார்.

இந்நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்து தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவுக்கு நம் நாட்டுக்குள் சீனாவை ஊடுருவ, மத்திய பா.ஜ., அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

தங்களின் ஆதாயத்துக்காக நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ., தமிழகத்தில் ஓட்டுக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்னை குறித்து எப்போது வாய் திறப்பார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


ponssasi - chennai, இந்தியா
03-ஏப்-2024 15:55 Report Abuse
ponssasi டாஸ்மார்க் கடைகளால் இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள். இது நீங்க கடந்த தேர்தலில் நீட்டி முழங்கி ஒட்டுக்கேட்டு ஜெயித்தது. உங்க சகோதரர் மற்றும் அவரது மகன் நீட் கைதுசெய்யப்படும்னு நீட்டி முழங்கி ஒட்டுக்கேட்டு ஆட்சிக்கு வந்தாங்க அதை பற்றியும் பேசலாம். புதுசா உங்க தகப்பனார் கருணாநிதி அவர்கள் உங்க குடும்பத்துல பண்ணின ஏமாற்றுவேலை மாதிரி நாட்டுக்கும் பெரும் துரோகம் செய்திருக்கார் அதுதான் கச்சத்தீவு .
A1Suresh - Delhi, இந்தியா
03-ஏப்-2024 14:21 Report Abuse
A1Suresh கான் கிராஸ் ஆட்சியில் ராகுல் காந்தியும் சோனியாவும் சீனாவுடன் செய்த ஒப்பந்தம் பற்றி பேசுங்களேன்.
jothi.n - chennai, இந்தியா
03-ஏப்-2024 07:07 Report Abuse
jothi.n குமுடிபூண்டி தாண்டினால் அட்ரஸ் தெரியாத கட்சிக்கு, அதிலும் தீவிரவாதிகளை பாதுகாக்கும் கட்சிக்கு, தேசபக்தியில் என்ன ஒரு பாசம் அப்பட்டமாக தெரிகிறது. சீனா ஒன்றும் எதிரி நாடு கிடையாதே.
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
02-ஏப்-2024 22:13 Report Abuse
R.MURALIKRISHNAN மதுவை ஒழிக்க வழி தெரியாத மக்கு, ஊருக்கு உபதேசம் சொல்லிச்சாம் கொக்கு
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்