வேட்பாளர் செலவு கணக்கு தாக்கல் செய்ய அவகாசம்

திருப்பூர்:செலவு கணக்கு தாக்கல் செய்ய, ஓட்டு எண்ணிக்கை நாளில் இருந்து, வேட்பாளர்களுக்கு, ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், கடந்த 6ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. வேட்பாளர், அதிகபட்சம், 30.80 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம்.அதிகாரிகள் கூறியதாவது:வேட்பாளர் மேற்கொண்ட செலவு, தொகுதி தேர்தல் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது; முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வேட்பாளர்களின் செலவு கணக்குகள், ஆய்வு செய்யப்படும்.

ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளில், வேட்பாளர் மேற்கொள்ளும் செலவும், வேட்பாளர் செலவுக்கணக்கில் வரும்.ஓட்டு எண்ணிக்கை நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள், வேட்பாளர்கள் தங்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மூன்று ஆண்டு வரை, தேர்தலில் போட்டியிட முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)