சென்னை: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களை, வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை: ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வந்து வைக்கப்பட்டுள்ளது. வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையில், கட்சி வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முகவர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஓட்டு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஓட்டுச்சாவடிகளில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்து கொள்ளட்டும் என நம் வேட்பாளர்கள் இருக்கக்கூடாது. ஏற்னவே நடந்த லோக்சபா தேர்தலில், மதுரை தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக்கூடாது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மையங்களை ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை கண்ணும் கருத்துமாக பார்ப்பது நமது கடமை.
வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்து பாதுகாத்திட வேண்டும். போலீசாரின் பணி என நினைத்து கட்சி வேட்பாளர்கள், தோழர்கள் கவனக்குறைவாக இருக்காமல் ஓட்டுப்பதிவிற்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்
evm. பொறுத்தவரை பலமுறை ஹேக் செய்யுமாறு தேர்தல் கமீஸின் சவால் விட்டது எந்த கட்சியாலும் அதை செய்ய முடியவில்லை . தங்களுக்கு பிடித்த பொம்மை EVM. வைத்து ஷோ காட்டினார்களே தவிர அரசின் இயந்திரத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை .ஆனாலும் வதந்தியை பரப்பி கொண்டே இருக்கிறார்கள் ஏனென்றால் பேப்பர் முறையில் செய்யக்கூடிய ஏமாற்று வேலைகளை இதில் செய்ய முடிவதில்லை மற்றும் தோற்கும் பொது என்ன வேண்டுமானாலும் சொல்லி சமாளிப்பது போன்றவைகளால்
அது சரி.. ஒரு ஆப் உருவாக்கி ஒடிபி மூலம் ஆதரவுடன் இணைத்து செய்து இருந்தால் நீங்கள் சொல்வதை பலரும் ஏற்றுக் கொள்வார்கள்.. இல்லை என்றால் அவர்கள் சொல்லி கொண்டே இருப்பார்கள் நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
போட்டுவிட்டு கண் விழித்து பாதுகாத்து எதற்கு இத்தனையும் பேசாமல் எண்ணி சொல்லி விடலாமே என்று சொல்றீங்க அப்படி தானே.....
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஏப்-2021 20:08 Report Abuse
ocean - Kadappa,இந்தியா
08-ஏப்-2021 23:39 Report Abuse
Visu Iyer - chennai,இந்தியா
10-ஏப்-2021 17:19Report Abuse
visu - Pondicherry,இந்தியா
07-ஏப்-2021 20:21 Report Abuse

Visu Iyer - chennai,இந்தியா
07-ஏப்-2021 21:08Report Abuse

வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
07-ஏப்-2021 19:25 Report Abuse
Visu Iyer - chennai,இந்தியா
07-ஏப்-2021 20:48Report Abuse
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஏப்-2021 20:14Report Abuse
Elango - Sivagangai,இந்தியா
07-ஏப்-2021 17:56 Report Abuse
கேவைசி - madurai,இந்தியா
07-ஏப்-2021 15:49 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
07-ஏப்-2021 19:22Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்
07-ஏப்-2021 15:15 Report Abuse
Visu Iyer - chennai,இந்தியா
07-ஏப்-2021 20:47Report Abuse