சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று (ஏப்.,6) 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், 3585 ஆண்கள்; 411 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் இருவர் என மொத்தம் 3998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த ஒரு மாதமாக அனைத்து வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இரவு 7 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவின் இறுதி நிலவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக பாலகோட் தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியான நிலவரத்தில், கரூரில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்:
தொகுதி வாரியாக பதிவான வாக்குகள்: