விதிமீறல் புகார்: தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. வேட்பாளர்களின் பிரசாரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இதற்காக கட்சிக்கொடிகளை கட்டியுள்ளனர். ஆனால், திருமண மண்டபத்தில் கூட்டத்தைக் கூட்ட முறையான அனுமதி பெறப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன், திருமண மண்டப உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்