'தி.மு.க.,வை புறக்கணிப்போம்' நாடார் அமைப்புகள்

'லோக்சபா தேர்தலில் போட்டியிட, நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்காத தி.மு.க.,வை புறக்கணிப்போம்' என, நாடார் அமைப்புகள் அறிவித்துள்ளன.

கார்த்திகேயன், மாநிலத் தலைவர், அகில இந்திய நாடார் மகாஜன சபை: சமூக நீதி, சமத்துவம் பேசும் தி.மு.க., சார்பில், 21 பேர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு நாடாருக்கு கூட வாய்ப்பு வழங்கவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். நடக்க உள்ள, தேர்தலில், ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும், தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்.

முத்துரமேஷ், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர்: தி.மு.க., போட்டியிடும், சமூக நீதி அடிப்படையில், மக்கள் தொகை அடிப்படையில், நாடார் சமுதாயத்திற்கு உரிய பங்கை வழங்கி இருக்க வேண்டும். அதை வழங்காததால், தி.மு.க.,வுக்கு எதிராக, லோக்சபா தேர்தலில் நாடார்கள் வாக்களிப்பர்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்