'காங்.,ல் முஸ்லிமுக்கு வாய்ப்பு கொடுங்க'

“லோக்சபா தேர்தலில் காங்., கட்சியில் முஸ்லிம் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்,” என அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்னுல்ஆலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அவர் மின்னஞ்சலில் அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:

லோக்சபா தேர்தலில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியின் ஓட்டு வங்கியாக கருதப்படும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம். கடந்த காலங்களில் நடந்த தவறை சரி செய்து தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்றில் வாய்ப்பு வழங்கினால் நல்லது.

இவ்வாறு அவர் தன் மின்னஞ்சல் மனுவில் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்