அதே வாக்குறுதி... அதே அறிக்கை: ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

"சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை மீண்டும் தி.மு.க., கொடுத்ததில் இருந்தே அவை எதையும் நிறைவேற்றவில்லை என ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னையில் தி.மு.க., தேர்தல் அறிக்கையை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். இதில், நீட் விலக்கு முதல் 36 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கொடுத்த 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே வரும் லோக்சபா தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறார்.

இதில் இருந்தே எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது. தி.மு.க., தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றியது.

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது லோக்சபா தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்கிறது.

இதுபோக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்த லோக்சபா தேர்தலுக்கும் தி.மு.க., கொடுத்திருக்கிறது.

பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், தி.மு.க.,வின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் தி.மு.க.,வின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


Arachi - Chennai, இந்தியா
23-மார்-2024 22:38 Report Abuse
Arachi எத்தனை முறை அண்ணாமலை திராவிடக் கட்சிகளைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் தமிழ்நாடு இந்தியாவிலே மற்ற மாநிலங்களுக்கு மாடலாக எல்லாத் துறையிலும் முன்னேறி இருக்கிறது என்றால் அது திராவிட கட்சிகளால் தான். குறிப்பாக திமுகவால்தான்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்