மானாமதுரை, அ.தி.மு.க., வேட்பாளர் நாகராஜன். இரண்டாவது முறையாக இங்கு போட்டியிடுகிறார். எதிர்த்து நிற்கும், தி.மு.க., வேட்பாளர் தமிழரசி, புரோட்டா, டீ மாஸ்டர் வேடமிட்டு, ஓட்டு சேகரிக்கிறார். அ.ம.மு.க., வேட்பாளர் மாரியப்பன் கென்னடி அதிருப்தி, அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை கவர திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் நாகராஜன், நடிகர் வடிவேலு பாணியில் பேசி மக்களிடம் ஓட்டு சேகரித்தார். 'என்னை எதிர்த்து, வெளியூர் வேட்பாளர்கள் நிற்கின்றனர். எனக்கு தான், இத்தொகுதியில், எங்கு பேய் இருக்கிறது. அதை எப்படி விரட்ட வேண்டும் என, தெரியும். அதனால் எனக்கே ஓட்டு போடுங்கள்' என்கிறார். பேய் என நாகராஜன் சொன்னது யாரை? என, தேடி வருகின்றனர் ர.ர.,க்கள்.--
வாசகர் கருத்து