பா. ஜ.,வுடன் கூட்டணி அமைத்து இருப்பதால், அ.தி.மு.க.,வுக்கு வழக்கமாக கிடைக்கும், சிறுபான்மையினர் ஓட்டு இம்முறை விழாது என்ற பிரசாரம் எடுபடாமல் இல்லை. தொண்டாமுத்துார் தொகுதியில், 70 ஆயிரம் ஓட்டுகள் இருப்பதால், வேலுமணிக்கு இதனால் சிக்கல் வரும் என கணிக்கப்பட்டது.
தனக்கு வராத ஓட்டு எதிரிக்கு சென்றுவிடக்கூடாது என்பதால், வில்லன் நடிகரை சுயேச்சையாக இறக்கி விட்டுள்ளதாக பேசுகின்றனர். மக்கள் நீதி மய்யம் சார்பில், முதலில், ஸ்ரீநிதி என்பவர் அறிவிக்கப்பட்டார். திடீரென, அவர் உடுமலைக்கு மாற்றப்பட்டு, ஷாஜகான் நிறுத்தப்பட்டார்.கோவை ஓட்டலில் தங்கி பிரசாரம் செய்து வரும் கமல், ஊர் ஊராக பறந்து சென்று, பிரசாரம்செய்து விட்டு, திரும்புகிறார். ஆனால், தொண்டாமுத்துார் தொகுதிக்குள் இதுவரை எட்டியே பார்க்கவில்லை.கடைசிகட்டமாக வைத்துக் கொள்ள போகிறாராம். அதற்குள் என்னென்னநடக்குமோ...!
வாசகர் கருத்து