மகனுக்காக தாரைவார்ப்பு அமைச்சர் மீது கொதிப்பு

கடந்த 2019ல் சேலம் லோக்சபா தொகுதியில் தி.மு.க.,வின் பார்த்திபன் போட்டியிட்டு வென்றார். அதனால் இந்த முறையும் தி.மு.க.,வுக்கு தான் தொகுதி கிடைக்கும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.

கட்சி நேர்காணலில், தற்போதைய எம்.பி., பார்த்திபன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, வீரபாண்டி ராஜா மகள் மலர்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே, திருச்சி, பெரம்பலுாரை தங்களுக்கு வழங்கும்படி காங்., கேட்டு வந்தது. ஆனால் திருச்சியை ம.தி.மு.க.,வுக்கும், பெரம்பலுாரை அமைச்சர் நேருவின் மகன் அருணுக்கும் வழங்க உள்ளதாக தி.மு.க., தலைமை தெரிவித்து விட்டது.

மேலும் சேலத்தை காங்.,குக்கு வழங்க அமைச்சர் நேரு ஒப்புக்கொண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் காங்.,குக்கு சேலம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் பொறுப்பு அமைச்சர் நேரு, தன் மகனுக்காக சேலம் தொகுதியை காங்., கட்சிக்கு தாரை வார்க்க முடிவு செய்தது, சேலம் தி.மு.க.,வினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்