கோஷ்டி பூசலில் அமைச்சர் : நேரடியாக எச்சரித்த ஸ்டாலின்

சென்னையை அடுத்த தாம்பரத்தில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலர் மற்றும் அமைச்சராக உள்ள அன்பரசன் - தாம்பரம்எம்.எல்.ஏ., மற்றும் மாநகர செயலராக உள்ள எஸ்.ஆர். ராஜா இடையே கோஷ்டி பூசல் உச்சகட்ட நிலையில் உள்ளது.

கோஷ்டி பூசல் குறித்து தி.மு.க., தலைமை வரை புகார் சென்றுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் டி.ஆர்.பாலுவே மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

தி.மு.க., பொருளாளரான டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா. கட்சிக்குள் டி.ஆர்.பாலுவும், அன்பரசனும் எதிர் கோஷ்டி களாக உள்ளனர்.

டி.ஆர்.பாலு மீண்டும் போட்டியிட்டால், அவருக்கு எதிராக அன்பரசன் கோஷ்டியினர் உள்ளடி வேலையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து டென்ஷனான முதல்வர் ஸ்டாலின், இருவரையும் அழைத்து, 'இப்படியே கோஷ்டியாக செயல்பட்டால் கட்சி எப்படி வளரும்? அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்யுங்கள். கோஷ்டி பூசல் தொடர்ந்தால் நடவடிக்கை பாயும்' என்று எச்சரித்ததாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

இதையடுத்து, இருவரும், நேற்று முன்தினம், மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ரகசிய கூட்டம் நடத்தினர். அமைச்சர் அன்பரசன், தாம்பரம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் மற்றும் மாநகரத்தில் உள்ள 10 பகுதி செயலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், அமைச்சர் அன்பரசன் கோஷ்டியினர் ராஜா மீதும், ராஜா கோஷ்டியினர் அன்பரசன் மீதும் மாறி மாறி புகார்களை தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், அன்பரசனும், ராஜாவும் வழக்கம் போல் காரசாரமாக பேசிக் கொண்டனர்.

இறுதியாக, இணைந்து பணியாற்றலாம் என இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து, கூட்டத்தைமுடித்துக்கொண்டுவெளியேறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்