சுரேஷ் கோபியை தோற்கடிக்க திருச்சூரில் காங்., திடீர் வியூகம்

மறைந்த முதல்வர் கருணா கரனின் மகன் முரளிதரன்எம்.பி.,யாகவும், எம்.எல்.ஏ., வாகவும் இருந்தவர். தற்போதுவடகரை சிட்டிங் எம்.பி.,

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கோழிக்கோடு மாவட்டம் வடகரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான பி.ஜெயராஜன் போட்டியிட்டார்.

வடகரை பொதுவாகவே காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி. கட்சித் தலைமையின் விருப்பத்தை ஏற்று, ஜெயராஜனை தோற்கடித்து எம்.பி.,யானவர் முரளிதரன். இவ்வாறு, கேரளாவில் காங்கிரசின் ஆபத்பாந்தவன் என்று பெயர் எடுத்தவர்.

கடந்த தேர்தலில்திருச்சூரில் 29 சதவீத ஓட்டுகள் வாங்கிய சுரேஷ் கோபி, இம்முறை இன்னும் 5 சதவீதம் வாங்கினால் வெற்றி பெறலாம் என, கடந்த ஆறு மாதங்களாக தொகுதியில் வேலை பார்த்து வருகிறார். அவருக்காக பிரதமர் மோடி, மூன்று முறை திருச்சூர் வந்துவிட்டார். சுரேஷ் கோபி வெற்றி பெறுவதன் மூலம், கேரளாவில் பா.ஜ.,வுக்கு முதல் எம்.பி., கிடைக்கும் என்று பா.ஜ.,வும் சந்தோஷமாக இருந்தது.

ஆனால், தங்களின் கோட்டையான கேரளாவில் பா.ஜ., 'கணக்கு திறப்பதை' காங்., விரும்பவில்லை. சிட்டிங் காங்., - எம்.பி., பிரதாபனுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் சுரேஷ் கோபி ஜெயித்துவிடுவார் என்பதால், போட்டியை பலமாக்க திருச்சூர்காரரான கருணாகரனின் மகன் முரளிதரனை நிறுத்த காங்., திடீரென முடிவு செய்தது.

'இந்த முறை மீண்டும் வடகரையில் போட்டியிட வேண்டாம்; திருச்சூரில் போட்டியிட்டு சுரேஷ் கோபியை தோற்கடியுங்கள்' என முரளிதரனுக்கு கட்சி கட்டளையிட்டது.

டில்லியில் காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, ராகுலிடமிருந்து முரளிதரனுக்கு தொகுதி மாறுமாறு அன்பு கட்டளை வந்தது.

அதுவரை வடகரையில் மீண்டும் போட்டியிடுவதாக இருந்த முரளிதரன், அங்கிருந்து கிளம்பி திருச்சூர் வந்தார். அங்கு முரளிதரனுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய முரளிதரன், 'சுரேஷ் கோபியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விடவே நான் தொகுதி மாறி வந்துள்ளேன். இது எங்களின் திடீர் வியூகம்' என்றார். இங்கு ஆளும் எல்.டி.எப்., சார்பில், முன்னாள் அமைச்சர் சுனில் குமார் - இந்திய கம்யூ., போட்டியிடுகிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்