தி.மு.க.,வுக்கு கலெக்டர் ஆதரவு? அ.தி.மு.க., எதிர்ப்பு

அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபு முருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில், அவர் கூறியிருப்பதாவது:

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே இடத்தில் பணிபுரியும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரே லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

தி.மு.க., அரசு இதை கண்டுகொள்ளாமல், திருப்பத்துார் கலெக்டராக இருந்த பாஸ்கர பாண்டியனை,திருவண்ணாமலைகலெக்டராக நியமித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.,பத்ரிநாராயணன்,அம்மாவட்டத்தில் பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, அவர்கள் இருவரையும், வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்