தேர்தல் வசூலில் காம்ரேடுகள்
திருப்பூர் லோக்சபா தொகுதியை இந்தமுறையும் இந்திய கம்யூ., கட்சியின் சுப்பராயனுக்கே தி.மு.க ஒதுக்கும் என்ற பேச்சு வலம் வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள கடை, கடையாக வசூலில் இறங்கிவிட்டனர், காம்ரேடுகள். சுப்பராயனின் ஐந்தாண்டு சாதனைகள் என்ற தலைப்பில் நோட்டீஸ் அடித்து, தேர்தல் நிதி கொடுங்க என ரசீது புத்தகத்தை நீட்டுகிறார்கள். அந்தந்த பகுதிகளின் பொறுப்பாளர்களும், சாலையோர வியாபாரிகள் உள்பட பலரிடமும் வசூல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இதனால் சிவப்பு கொடியை கண்டாலே கடை உரிமையாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். சில இடங்களில், ஓனர் வெளியூர் போயிருக்காரு எனச் சொன்னாலும், நம்பரை கொடுங்க.. நாங்க பேசிக்கறோம் என கட்டாயப்படுத்துகிறார்களாம்.
வாசகர் கருத்து