கசியும் தேர்தல் வியூகம்.. கடுப்பில் தி.மு.க
ஆளும்கட்சியான தி.மு.க., லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மக்களின் நாடித் துடிப்பு குறித்து உளவுத்துறை தரும் தகவல்களை வைத்து தான், தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும், தி.மு.க., வின் தேர்தல் வியூகங்கள் அனைத்தும் உடனுக்குடன், அ.தி.மு.க.,வுக்கு போய்விடுகிறதாம். காரணம், அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புகளில் உள்ள சிலரின் உறவினர்கள், உளவுத்துறையில் பணியில் இருக்கிறார்களாம். அவர்கள் வழியாக தேர்தல் வியூகங்கள் எதிரணிக்கு போய்விடுகிறதாம். அவர்கள் யார்.. யார் என பட்டியல் எடுக்கும் பணிகள் நடக்கிறதாம். விரைவில் உளவுத்துறையில் மாற்றம் இருக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது.
வாசகர் கருத்து