தி.மு.க., வேட்பாளர் ராஜாவிடம் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க.,வினர்

மேட்டுப்பாளையத்தில், எதிர்க்கட்சி வேட்பாளரான தி.மு.க., எம்.பி., ராஜாவிடம், அ.தி.மு.க., தொண்டர்கள் ஓட்டு சேகரித்தனர். அப்போது, பா.ஜ., வெற்றி பெறக்கூடாது என அறிவுரை கூறினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - - ஊட்டி சாலையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த, நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் எம்.பி.,ராஜாவை பார்த்து, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க., தொண்டர்கள், 'போடுங்கம்மா ஓட்டு; ரெட்டை இலையை பார்த்து' என, கோஷம் போட்டனர்.

உடனடியாக காரை நிறுத்திய ராஜா, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், ''பா.ஜ., வெற்றி பெற்று விடவே கூடாது,'' என்றார். அவருக்கு அ.தி.மு.க.,வினர் நோட்டீஸ் வழங்கினர்.

இதனிடையே ராஜா, பேசிக்கொண்டு இருந்தபோது தி.மு.க., தொண்டர் ஒருவர், அ.தி.மு.க.,வினர் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு, கோஷம் எழுப்பியபோது, தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு எதிர் கோஷம் எழுப்பினார். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்